More
Categories: Cinema News latest news

மரணத்திற்கு பின்னரும் 4 பேருக்கு பார்வை கொடுத்த புனித் ராஜ்குமார்…..

கன்னட திரையுலகத்தின் பவர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் கடந்த 29ம் தேதி உயிரிழந்தார்.

இது கன்னட சினிமா உலகினருக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் புனித் குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இவரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Advertising
Advertising

இதையும் படிங்க: குனிந்து போஸ் கொடுத்து கும்முனு காட்டிட்டீங்களே – சன்னிலியோனை தூக்கி சாப்பிட்ட பாலிவுட் நடிகை!

புனித் ராஜ்குமார் ஏழை, எளிய மக்களுக்காக 15 இலவச பள்ளிகள், 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள் மற்றும் 1800 மாணவர்களுக்கு பள்ளி கட்டணத்தையும் அவரே செலுத்தி வந்தார். அவர் மரணம் அடைந்த போது பலரும் இது பற்றி நெகிழ்ச்சியாக குறிப்பிட்டனர்.

 

மேலும், அவர் கண் தானம் செய்து வைத்திருந்தார். எனவே, அவரின் மரணத்திற்கு பின் அவரின் கண்கள் வெளியே எடுக்கப்பட்டது. தற்போது அவரின் கண்கள் மூலம் 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: நான் கேட்டதுக்காக முன்பக்க போட்டோ அனுப்பிய கீர்த்தி பாண்டியன்!

புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்களும் பெங்களூருவிலுள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. எனவே, நவீன தொழில்நுட்பம் மூலம் 4 பாகங்களாக அவரின் கண்கள் பிரிக்கப்பட்டு கண்பார்வையில் பிரச்சனை கொண்ட 4 பேருக்கு அவரின் கண்கள் பொருத்தப்பட்டது. புனித் ராஜ்குமாரால் 4 பேர் பார்வை பெற்றுள்ளனர் என மருத்துவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

உயிரோடு இருக்கும் போது பலருக்கும் உதவி வந்தார் புனித் ராஜ்குமார். தற்போது மரணத்திற்கு பின்னரும் 4 பேருக்கு பார்வை கொடுத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts