Connect with us

Cinema News

விஜய் சேதுபதிக்கே அந்த அடினா.? நம்ம கதி அதோ கதிதான்.! தெறித்து ஓடிய பிரபலம்.!

தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனங்கள், பட நடிகர்கள் தரும் விளம்பரங்களை விட  அந்த படங்களுக்கு எதிராக போடப்படும் வழக்குகள், புகார்கள், எதிர்ப்பு குரல்கள் அதுவே படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்து விடும். அதன் மூலமே சில பெரிய ஹீரோ படங்கள் கூட மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளன.

அந்தவகையில் ஒரு திரைப்படம் உருவாவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் போதே பெரிய பூதாகரமான சர்ச்சையாக வெடித்தது. அந்த படத்தை டிராப் செய்யும் நிலைமைக்கு கொண்டு சென்றனர் எதிரிப்பாளர்கள்.

அந்த திரைப்படம் தான் 800. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றை தான் திரைப்படமாக்க படக்குழு முயற்சித்தது. அதற்கு விஜய் சேதுபதியிடம் கதை கூறியதாக தெரிகிறது.

இதையும் படியுங்களேன் – அந்த மாதிரி ஒரு வீடீயோவை காட்டி சிம்புவையே கவுத்திடீங்களே.! விஷயமே இதுல வேற.!

அதன் பின்னால் பல சர்ச்சைகள் எழுந்தது. அதன் காரணமாக விஜய்சேதுபதி அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். விஜய்சேதுபதிக்கு பல தரப்பில் இருந்து அப்போது எதிர்ப்பு குரல்கள் அதிகமாக வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பாலிவுட் ஹீரோக்களை அந்தக்குழு தேடி வருகிறது. ஆனால், ஹீரோயினாக நடிக்க மீண்டும் தமிழகம் பக்கம் அந்த படக்குழு வந்தது. நடிகை பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. விஷயத்தை கேள்விப்பட்ட பிரியா பவானி சங்கர், ‘ நீங்கள் எத்தனை கோடி சம்பளம் கொடுத்தாலும் இந்த படத்தில் நான் நடிக்க தயாராக இல்லை.’ என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாராம்.

முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதிக்கே அவ்வளவு எதிர்ப்புகள் வந்தது. அப்படி இருக்கையில் பிரியா பவானி சங்கர் அப்படத்தில் நடித்திருந்தால் நிச்சயம் பிரச்சனை வரும் என்பதால், பிரியா பவானி சங்கர் சுதாரித்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top