
கடந்த ஒரு வாரமாக குடியுரிமை சீர்திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிராக மாணவ மாணவிகள் போராட்டம் செய்து வரும் நிலையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் இந்த பகுதியில் மாணவி ஒருவர் போலீசாருக்கு ரோஜா கொடுத்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
டெல்லியில் மாணவர்கள் ஆவேசமாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வந்த போதிலும் பெரும்பாலான மாணவர்கள் வன்முறையில் இறங்காமல் அமைதி வழியில் போராடி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் திடீரென போலீசார் குவிக்கப்பட்ட போது அங்கு வந்த ஒரு மாணவி, ஒரு ரோஜாப்பூவை கையில் எடுத்து போலீசாரின் ஒருவரிடம் நீட்டினார். மேலும் அவர் அந்த போலீசிடம் ’நாங்கள் அமைதியான வழியில் போராடுகிறோம் நீங்களும் அன்பை பரிமாறுங்கள்’ என்று கூறியது போலீசார்களை எங்களை நெகிழ வைத்துள்ளது.

இந்த புகைப்படங்கள் இந்தியா முழுவதும் பயங்கர வைரலாகியுள்ள நிலையில் இந்த மாணவியின் இந்த சமயோசிதமான செயலால் போராட்டத்தை கட்டுப்படுத்த வந்த போலீசார்கள் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.



