இந்த முறை சும்மா இருக்க மாட்டேன்…! தொடர் சர்ச்சைகளினால் கடுப்பான சமந்தா…

Published on: September 6, 2022
sam_main_cine
---Advertisement---

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது யசோதா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

sam1_cine

ஹிந்தியில் தயாராகும் இந்த படம் மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வரவிருக்கிறது. இதில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த நிலையில் பிஸியாக வலம் வரும் சமந்தாவை பற்றி ஊடகங்கள் சில வதந்திகளை கிளப்பி வருவதாக தெரிகிறது.

இதையும் படிங்கள் : ஓ…இதெல்லாம் நடந்துருக்கான்னு அப்போ தான் தெரிய வரும்….ரஞ்சிதா எதைச் சொல்கிறார்னு பாருங்க..!

sam2_cine

அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பதாலும் அதனால் தான் வெளியிடங்களில் அவரை காண இயலவில்லை என்றும் வதந்திகளை பரப்பிவருகின்றனர். இதை பற்றி கேள்விப்பட்ட சமந்தா இந்த முறை பொறுமையை இழந்து யாரெல்லாம் தன்னை பற்றி தேவையில்லாததை எல்லாம் பரப்புகிறார்களோ குறிப்பிட்ட ஊடகங்களை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருப்பதை தெரிவித்திருக்கிறார்.

sam3_cine

இதையும் படிங்கள் : வெள்ளை சேலையும் வெள்ளை இடுப்பும் மூட ஏத்துது!…ஷெரினின் ஹாட் கிளிக்ஸ்…

இதே போல் தான் இவரும் நாகசைதன்யாவும் பிரிந்த சமயத்தில் ஜீவனாம்சமாக 250 கோடியை கேட்டதாகவும் வதந்திகளை பரப்பியிருந்தனர். அப்போது பொறுமையுடன் இருந்த சமந்தா இந்த முறை கோபமடைந்து சட்டத்தை நாடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.