Cinema News
அந்த ஒரு விஷயத்தில மணி சார் என்னை ஏமாத்திட்டாரு…! மும்பையில காலவாரி விட்ட நடிகர் விக்ரம்…
Published on
By
தமிழ் சினிமாவின் பெருமையை நிலை நாட்ட உலகம் முழுவதும் எதிர்பார்க்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இது ஒரு அழகிய சுற்றுலா போலவே நடித்த பிரபலங்கள் எண்ணுகின்றனர். அந்த வகையில் நேற்று மும்பையில் நடந்த பிரஸ் மீட்டில் நடிகர் ஜெயம் ரவி, ஏஆர்.ரகுமான், நடிகர் விக்ரம், இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய நடிகர் விக்ரம் தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
இதையும் படிங்கள் : எனக்கு தான் வேணும்…சூர்யாவுடன் சண்டையிட்ட கார்த்தி… கசிந்த தகவல்
அதாவது மணிரத்னம், சங்கர் சாரோட படத்துல நடிச்சுட்டு ரிட்டையர்டு ஆகிரனும் நினைச்சுட்டு இருந்தேன். சங்கர் சார் படத்துல நடிச்சுட்டேன். மணி சாரோட இது எனக்கு இரண்டாவது படம். அவர் படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி மாதவனை பைக்-ல என்ரி சீன் கொடுத்து மேடி, மேடினு எப்படி கூப்பிட வைத்தாரோ அதே போல என்னையும் விக்கி, விக்கினு கூப்பிட வைப்பாருனு கனவுல இருந்தேன். ஏனெனில் அலைபாயுதே படத்தில் ஏற்கெனவே விக்ரமிற்கு ஒரு சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை நிராகரித்து விட்டார். இதை தற்சமயன் நினைவு படுத்தி கூறியிருக்கிறார். மேலும் கூறிய விக்ரம்,
ஆனால் ஒரு காட்டுக்குள்ள உட்கார வைச்சு ராவணன் படத்தை கொடுத்து ஏமாத்திட்டாரு. சரி இன்னொரு வாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்த்துட்டு இருந்த சமயத்தில இந்த படத்துக்காக கூப்பிட்டு நீ ஒரு அரசன் -னு சொல்லி நடிக்க வைச்சுட்டாரு என்று கேலிக்கையாக கூறினார். ஆனாலும் இந்த படத்தின் டிரெய்லர் என்னோட என்ரி சீனோட தான் ஆரம்பிக்குது. அதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.
தமிழ்ப்பட உலகின் வெற்றிப் பட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கமலை வைத்து 2000த்தில் தெனாலி என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். தசாவதாரம், அவ்வை...
தனுஷின் 50வது திரைப்படமாக உருவாகி இருக்கிறது ராயன். இந்த படத்தை தனுஷே இயக்கி நடித்திருக்கிறார். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு பவர்...
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக மாறியிருப்பவர் விஜய். சில வருடங்களுக்கு முன்பு ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்த விஜய் இப்போது அவருக்கு...
Kamalhassan: தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் எல்லா மொழி படங்களுமே கேமியோவை சாதாரணமாக பயன்படுத்த தொடங்கிவிட்டது. அந்த வகையில் புது...
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு விஜய்...