பிரபல சீரியல் நடிகரின் மனைவி தீடீர் மரணம்!..ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த சின்னத்திரை!..

Published on: October 31, 2022
bharath_main_cine
---Advertisement---

90களில் பல சீரியல்களில் முன்னனி நடிகராக இருந்தவர் பரத் கல்யாண். இவர் ‘பாட்டாளி’ போன்ற ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் அண்ணன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

bharath1_cine

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பரத்கல்யாணுக்கு பிரியா என்ற மனைவியும் ஒரு மகன் , ஒரு மகள் ஆகியோர் இருக்கின்றனர். இந்த நிலையில் மனைவி பிரியாவுக்கு சில மாதங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாம்.

இதையும் படிங்க : தர்மசங்கடமான நிலையில் ‘மாவீரன்’ படம்!..பொறுமை இழந்து பொங்கி எழுந்த சிவகார்த்திகேயன்!..

bharath2_cine

40வயதே ஆன மனைவி பிரியா கிட்டத்தட்ட கோமா நிலைக்கு சென்றிருக்கிறார். இப்படி இக்கட்டான நிலையில் இருந்த பிரியா இன்று காலை மரணமடைந்தார். இந்த செய்தியை கேட்டு சின்னத்திரை நடிகர்கள் பலரும் தங்கள் அஞ்சலியையும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

bharath3_cine

மேலும் பிரியாவின் சகோதரி வெளியூரில் இருப்பதால் அவர் வந்ததும் நாளை இவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது. மனைவியின் பிரிவை தாங்கமுடியாமல் பரத்கல்யாண் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.