Cinema News
“எல்லா சீன்லயும் ஒரே மாதிரியே ரியாக்சன் கொடுக்குறாரே”… தெலுங்கு சூப்பர் ஸ்டாரை கலாய்த்த ஜெயம் ரவி??
Published on
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடித்திருந்தார். பின்னாளில் ராஜ ராஜ சோழனாக அறியப்பட்ட அருண்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தில் மிகவும் மிடுக்காக தோற்றமளித்தார் ஜெயம் ரவி. அவரின் நடையும் பாவனையும் ஒரு சோழ இளவரசனை கண்முன் கொண்டு வந்திருந்தது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்தபோது, இணையத்தில் பலரும் அந்த கதாப்பாத்திரத்திற்கு அவர் பொருந்துவாரா? என பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அந்த சந்தேகங்களை எல்லாம் தவிடுபொடியாக்குவது போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஜெயம் ரவி.
இந்த நிலையில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாவதற்கு முன் கலந்துகொண்ட ஒரு பேட்டியில் ஜெயம் ரவி தன்னிடம் கூறிய ஒரு விஷயத்தை குறித்து சீயான் விக்ரம் மிகவும் நசைச்சுவையாக பகிர்ந்திருந்தார்.
அதாவது ஒரு நாள் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஜெயம் ரவி “ஒரு நடிகர் காதல் காட்சியாக இருந்தாலும் சரி, சென்டிமென்ட் காட்சியாக இருந்தாலும் சரி, ஆக்சன் காட்சியாக இருந்தாலும் சரி, எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரியே ரியாக்சன் கொடுக்குறாரே, எப்படிங்க?” என ஒரு குறிப்பிட்ட நடிகரின் பெயரை சொல்லி கேட்டிருக்கிறார்.
அதற்கு விக்ரம் “அவரை எனக்கு நன்றாக தெரியும் , அவர் என் நண்பர்தான்,” என கூறினாராம். உடனே ஜெயம் ரவி “அதான் எப்படிங்க??” என கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: “நீங்க இப்போ அழுதே ஆகனும்”… கண்டிஷன் போட்ட மணி ரத்னம்… சத்தம் போட்டு சிரித்த சரண்யா…
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வர, இணையவாசிகள் பலரும் “தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை குறித்துத்தான் ஜெயம் ரவி அவ்வாறு கேட்டுள்ளார்” என அந்த வீடியோவை பரப்பி வருகின்றனர். இதனால் மகேஷ் பாபு ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் அட்லி. இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இவர் ராஜா ராணி படம்...
இயக்குனர் ஸ்ரீதர் என்றால் தமிழ்ப்பட உலகில் தவிர்க்க முடியாத இயக்குனர். அவரது படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக...
வைகாசி பொறந்தாச்சு என்ற முதல் படத்திலேயே மாபெரும் ஹிட்டைக் கொடுத்தவர் இயக்குனர் ராதா பாரதி. இவர் தனது திரையுலக சுவாரசியங்களை பிரபல...
சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் அவரின் அடுத்த படம் வெளியாகவில்லை. கங்குவா படம்...
Ejaman: அன்புள்ள ரஜினிகாந்த் படத்திற்கு பிறகு ரஜினியுடன் முதன் முதலில் ஜோடி சேர்ந்து மீனா நடித்த திரைப்படமாக அமைந்தது எஜமான் திரைப்படம்....