தமிழ் நடிகைகளுக்கு தொடர்ந்து காதல் வலை வீசிய சரத்குமார்… போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது…

Published on: November 29, 2022
---Advertisement---

கோலிவுட்டில் யாரும் அறியாத காதல் மன்னனாக இருந்தவர் சரத்குமார். அவர் சினிமாவில் நடிக்கும் போது ஏகப்பட்ட நடிகைகளிடம் காதல் வலை வீசிய தகவல்கள் கசிந்துள்ளது.

சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் பாடிபில்டராக இருந்தவர். பின்னர் பத்திரிகையாளராகினார். அதை தொடர்ந்து, 1986ல், சரத்குமார் தெலுங்கு திரைப்படமான சமாஜம்லோ ஸ்திரீயில் திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

சரத்குமார்
Sarathkumar_Devayani

சினிமாவிற்கு வரும்போது அவருக்கும் சாயா தேவி என்பவருக்கும் திருமணம் முடிந்திருந்தது. இத்தம்பதிக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என இரு மகள்கள் இருக்கிறார்கள். சரத்குமார் தொடர்ந்து நடிகைகளுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்ட தகவல் மீடியாக்களில் கசிந்தது. இதில் கடுப்பான சாயா 2000ம் ஆண்டு சரத்குமாரிடம் இருந்து விவகாரத்து பெற்றார்.

சரத்குமார் லைனில் இருந்த நடிகைகள் யார் என்றால் ஆச்சரியம் தான் மிஞ்சும். சரத்குமார் முதலில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பியது நடிகை தேவயானியை தான். அவர் தாயிடம் சென்று பெண்ணும் கேட்டு இருக்கிறார். நீங்க ஏற்கனவே திருமணமானவர். இனிமே விவகாரத்தெல்லாம் வாங்கணுமே என கடுப்படித்து இருக்கிறார். இது நடக்காது என தெரிந்ததும் சரத்குமார் பின்வாங்கினார்.

Nagma

அடுத்து இவரின் ஆசை வலையில் விழுந்தவர் நடிகை ஹீரா. அவரை துரத்தி துரத்தி காதலித்தார் சரத்குமார். ஆனால், ஹீரா அவரிடம் செம காட்டமாகவே நான் மும்பைகாரி. நீங்க தமிழ்நாட்டுக்காரர் இதெல்லாம் நமக்குள்ள ஒத்துக்காது என கத்தரித்து விட்டார்.

இதையும் படிங்க: என் பொண்டாட்டியை பாத்து எப்படி நீ அந்த கேள்வியை கேட்ட? சரத்குமார் கிழித்து தொங்க விட்ட மூத்த நடிகர்…

இதனையடுத்து, நக்மா மீது காதல் ஆசையில் விழுந்தார் சரத்குமார். அவருக்காக வெளிநாட்டுக்கெல்லாம் சென்று படம் எடுத்திருக்கிறார். ஆனால் நடிகை நக்மா சரத்துடன் ஊர் சுற்றுவதை மட்டும் செய்தாராம். திருமணத்திற்கெல்லாம் ஓகே சொல்லவே இல்லையாம். இவர்கள் இருவரின் காதல் கலாட்டாக்களை மொத்த கோலிவுட் திரையுலகம் அறிந்திருந்தனர். இதனால் தான் முதல் மனைவியான சாயா தேவி சரத்குமாரை விவாகரத்து செய்தார்.

Sarathkumar_Radhika

அடுத்தது, சரத்குமார் திருமணம் செய்து கொண்டது நடிகை ராதிகாவை தான். இந்த திருமணத்துக்கு பின்னர் எந்த நடிகையுடன் பெரிதாக சில்மிஷம் செய்யாமல் சரியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.