">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தொழிலதிபர் மீது அமலாபால் கொடுத்த பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்!
பிரபல நடிகை அமலாபால் கடந்த 2018ஆம் ஆண்டு திடீரென தொழிலதிபர் ஒருவர் மீது பாலியல் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் என்பவரும் பாஸ்கர் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று பாஸ்கர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொழிலதிபர் அழகேசன் கொட்டிவாக்கம் பகுதியில் டான்ஸ் ஸ்கூல் நடத்தி வருகிறார் என்பதும், அங்கு டான்ஸ் ரிகர்சலுக்காக வந்த நடிகை அமலாபாலிடம் பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் அழகேசன் பேசியதாகவும் அமலாபால் புகார் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.