
Cinema News
எல்லா பணமும் போச்சு-சிம்பு பட தயாரிப்பாளரின் குமுறல்… அப்படி என்ன நடந்தது தெரியுமா?
Published on
சிலம்பரசன், கௌதம் கார்த்திக் ஆகியோரின் நடிப்பில் வருகிற 30 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “பத்து தல”. இத்திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிம்பு ரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
Pathu Thala
“பத்து தல” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய சிம்பு, “நான் ரசிகர்களை பல முறை தலைகுனிய வைத்துள்ளேன். இனிமேல் நான் உங்களை தலைகுனியவிடமாட்டேன்” என மிகவும் எமோஷனலாக பேசினார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், “உங்களது திரைப்பயணத்தை திரும்பி பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?” என்று ஒரு கேள்வியை கேட்டார்.
பணம் எல்லாமே போச்சு…
அதற்கு பதிலளித்த ஞானவேல்ராஜா, “எனக்கு பத்து தல படம்தான் தொடக்கமே. 16 வருடத்திற்கு முன்பு என்ன சம்பாதித்து வைத்திருந்தேனோ. ஆறு வருடத்திற்கு முன்பு எல்லாமே போய்விட்டது. அதை எல்லாம் தாண்டி இப்போது எதுவும் இல்லாமல் பத்து தல படத்தில் இருந்துதான் எனது பயணத்தை தொடங்கவுள்ளேன்.
Gnanavel Raja
இப்போதிலிருந்து என்ன செய்கிறோம் என்பதுதான் கணக்கு. இது வரை கிடைத்ததெல்லாம் அனுபவங்கள் மட்டும்தான். யார் நம்முடன் இருப்பார், யார் நம்முடன் இருக்கமாட்டார் இதுதான் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள். இனிமேல்தான் பொருளாதார ரீதியாக உயரவேண்டும். ஆதலால் பத்து தல படம்தான் முதல் படம்” என கூறியிருந்தார்.
கே.இ.ஞானவேல்ராஜா “சில்லுனு ஒரு காதல்”, “பருத்திவீரன்”, “சிறுத்தை”, “மெட்ராஸ்”, “கொம்பன்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நவசர நாயகனுக்கு அப்படியே நேர் எதிர்… கௌதம் கார்த்திக் இப்படிபட்ட ஒரு நடிகரா!… இது தெரியாம போச்சே…
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...