
Cinema News
உன் படத்துல விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடு ப்ளீஸ்!.. பார்த்திபனிடம் கெஞ்சிய எஸ்.ஏ.சி!…
Published on
By
திரையுலகில் வாய்ப்பு என்பது எல்லோருக்கும் சுலபமாக கிடைத்துவிடாது. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நல்ல கதை அமைந்து, நல்ல இயக்குனர் படத்தில் நடித்து, அந்த படம் நிற்காமல் படப்பிடிப்பு நடந்து, எந்த சிக்கலும் இல்லாமல் வெளியாகி, அப்படியே வெளியனாலும் ரசிகர்களுக்கு பிடித்து வெற்றி பெற்றால் மட்டும் ஒரு நடிகர் இங்கே அடுத்த படத்தில் நடிக்க முடியும். இதில், எங்கு தேங்கிப்போனாலும் சரி அவருக்கு சினிமாவில் வாழ்க்கை அவ்வளவுதான்.
நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் மகனாக இருந்தால் சுலபமாக ஹீரோ வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால், படம் வெற்றி பெற நல்ல டீம் அமையவேண்டும். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கென ஒரு மார்க்கெட் உருவாகும். திரையுலகில் பிரபலங்களின் வாரிசுகள் பலர் சினிமாவில் களம் இறங்கி நடித்தனர். ஆனால், எல்லோராலும் முன்னணி நடிகராக மாற முடியவில்லை. சிலர் மட்டுமே உச்சம் தொட்டுள்ளனர். அதில் விஜய் முக்கியமானவர்.
அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனர் என்பதால் அடம்பிடித்து ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெற்று ரசிகர்களை கவரவில்லை. எனவே, பெரிய நடிகர்களின் படங்களில் விஜய் நடித்தால் ரசிகர்களிடம் ரீச் ஆகலாம் என கணக்குப்போட்ட எஸ்.ஏ.சி. அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த பலரிடமும் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்த்திபன் ‘விஜயின் அப்பா என்னிடம் நீ நடிக்கும் படத்தில் உன் தம்பியாக விஜயை நடிக்க வை’ என அடிக்கடி என்னிடம் கேட்பார். ஆனால், அது நடக்கவில்லை. துவக்கம் எல்லோருக்கும் சிரமமாகத்தான் இருக்கும்’ என்று பேசியுள்ளார்.
எஸ்.ஏ.சியின் இந்த கோரிக்கையை ஏற்று விஜயை தனது தம்பியாக நடிக்க வைத்தவர் விஜயகாந்த் மட்டுமே. விஜயகாந்தை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியவர் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். அந்த நன்றி கடனுக்காகவே எஸ்.ஏ.சி இயக்கிய செந்தூரப்பாண்டி படத்தில் விஜயின் அண்ணனாக நடித்து கொடுத்தார். அந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read: லோகேஷ் கனகராஜின் புதிய படத்தில் யார் ஹீரோ தெரியுமா?!.. இது லிஸ்ட்லயே இல்லையே!..
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...