
Cinema News
விஜயுடன் நடிக்க மறுத்த சத்தியராஜ்!.. உடனே ஒப்புக்கொண்ட விஜயகாந்த்!.. கண்ணீர் விட்ட எஸ்.ஏ.சி…
Published on
By
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கி புரட்சி இயக்குனர் என பெயர் எடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்தை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவரின் மகன் விஜய். கல்லூரி படிப்பை முடித்தவுடன் நடிகராக வேண்டும் என ஆசைப்பட முதலில் எஸ்.ஏ.சி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், விஜய் அதில் உறுதியாக இருந்ததால் வேறுவழியில்லாமல் அவரே தயாரித்து நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் விஜயை அறிகம் செய்தார்.
அதன்பின் மாண்புமிகு மாணவன், தேவா, கோயம்பத்தூர் மாப்பிள்ளை என சில படங்களை விஜயை வைத்து எடுத்தார். ஆனால், அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, இனிமேல் விஜயை மட்டுமே ஹீரோவாக போட்டு எடுத்தால் படம் ஓடாது. மார்க்கெட் உள்ள பெரிய நடிகர்களுடன் இணைந்து விஜய் நடித்தால் மட்டுமே நிலமை மாறும் என கணக்குப்போட்ட எஸ்.ஏ.சி. அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த பல நடிகர்களையும் அணுகி விஜய்க்கு அண்ணனாக நீங்கள் ஒரு படத்தில் நடித்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஆனால், பலரும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பார்த்திபன், சரத்குமார், சத்தியராஜ் என பல நடிகரின் பின்னாலும் அழைந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். சத்தியராஜ் படப்பிடிப்பில் இருக்கும் போது அவரை பல முறை சென்று பார்த்தாராம் எஸ்.ஏ.சி. ‘கண்டிப்பாக செய்வோம். நம்ம பையனுக்கு செய்யமாலா’ என பிடி கொடுக்காமலேயே பேசிவந்துள்ளார் சத்தியராஜ். ஒருகட்டத்தில் அவர் நடிக்க மாட்டார் என்பதை எஸ்.ஏ.சி புரிந்து கொண்டார்.
இதுபற்றி ஒரு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் மற்றும் நடிகர் பாரதி கண்ணன் ‘சத்தியராஜ நடிக்க மாட்டார் என்பதை புரிந்து கொண்ட எஸ்.ஏ.சியும், அவரின் மனைவி ஷோபாவும் விரக்தி அடைந்தனர். அப்போதுதான் ஷோபா விஜயகாந்திடம் பேசுங்கள் என்றார். ஆனால், நாம் வளர்த்துவிட்டவர் விஜயகாந்த் அவரிடம் எப்படி கேட்பது? என எஸ்.ஏ.சி யோசித்தார். ‘விஜயகாந்த் கண்டிப்பாக செய்வார், அவரிடம் பேசுங்கள்’ என ஷோபா கூற, உடனே அவரை போனில் அழைத்து உங்களை சந்திக்க வேண்டும் என்றார்.
அதற்கு விஜயகாந்த் ‘என்னை பார்க்க நீங்கள் வரக்கூடாது. உங்களை பார்க்க நான்தான் வரவேண்டும்’ எனக்கூறி உடனே எஸ்.ஏ.சியின் வீட்டுக்கு வந்தார். எஸ்.ஏ.சி விஷயத்தை சொல்ல உடனே சம்மதம் சொன்னார் விஜயகாந்த். நீங்கள் வேலையை துவங்குகள் அடுத்த மாதம் நான் நடித்து கொடுக்கிறேன் என சொன்னார். அவர்தான் விஜயகாந்த்’ என பாரதி கண்ணன் பேசியிருந்தார்.
எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜயகாந்தின் தம்பியாக விஜய் நடிக்க உருவான திரைப்படம்தான் செந்தூரபாண்டி. இப்படம் 1993ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...