
Cinema News
நான் ஆசைப்பட்ட மாதிரி நடக்கல.. அந்த படத்தோட சினிமாவ விட்டே போகலாம்னு இருக்கேன்! – சுந்தர் சி சொன்ன அதிர்ச்சி தகவல்!..
Published on
By
தமிழில் கமல் ரஜினி என பெரும் நடிகர்களை கொண்டு பல மாஸ் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. கமல் ரஜினி இருவருக்குமே இரண்டு வித்தியாசமான படங்களை கொடுத்தவர் சுந்தர் சி.
பொதுவாக திரைப்படங்களில் ஏழையாக இருக்கும் ரஜினி பணம் சம்பாதித்து பெரும் ஆளாக வருவது கதையாக இருக்கும். ஆனால் அருணாச்சலம் திரைப்படத்தில் சாதரண மனிதராக இருக்கும் அருணாச்சலம் 30 கோடி ரூபாயை 30 நாளில் செலவு செய்து அழிக்க வேண்டும் என்பதே கதையாக இருக்கும்.
அதே போல சுந்தர் சி கமலை வைத்து இயக்கிய சிறப்பான திரைப்படம் அன்பே சிவம். இப்போதும் கூட அந்த படம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு சுந்தர் சியின் திரைக்கதையே முக்கிய காரணமாக உள்ளது.
வாழ்நாள் ஆசை:
இதே போல நிறைய ஹிட் படங்களை சுந்தர் சி கொடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் பேட்டியில் கூறும்போது பல நடிகர்களை வைத்து பல படங்கள் இயக்கியுள்ளேன். அவை எல்லாம் மக்களுக்கு பிடிக்கும் வகையில் படம் எடுக்க வேண்டும் என இயக்கிய திரைப்படங்கள்தான்.
ஆனால் சினிமாவில் படம் எடுப்பதில் எனக்கென்று ஒரு ஆசை உள்ளது. நான் ஆசைப்பட்ட மாதிரியான திரைப்படத்தை இன்னும் நான் எடுக்கவே இல்லை. அப்படி நான் ஆசைப்பட்ட ஒரு கதைதான் சங்கமித்ரா திரைப்படம். ஆனால் தற்சமயம் அந்த படத்தை தொடர்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
இருந்தாலும் அந்த படத்தை எடுத்து முடிப்பேன். சங்கமித்ரா திரைப்படத்திற்கு பிறகு டைரக்ஷனில் இருந்து ஓய்வு பெறலாம் என உள்ளேன் என கூறியுள்ளார் சுந்தர் சி.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...