">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
டாடா காட்டிய காதலி… பழி வாங்கிய காதலன்… தூக்கியடித்த போலிஸ்!
காதலியை பழிவாங்க காதலன் போட்ட மெகா திட்டத்தால் திக்முக்காடிய பெண் வீட்டார், காதலனை போலிஸில் பிடித்து கொடுத்து கம்பி எண்ண வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உ.பி மாநிலம் சலான் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஒரு சரேஜ்குமார் இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பெண் காதலில் செட் ஆகாது என சரோஜ்குமாரை பிரிந்து வேறு ஒருவரைத் திருமணம் செய்யத் தயாரானது.
இந்நிலையில் அந்த பெண்ணிற்கு வழக்குரைஞர் ஒருவருடன் திருமணத்திற்கு நிச்சயமாகியிருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணை முதலில் காதலித்த இளைஞர் சரோஜ் குமார் காதலிக்கும் போது ஒன்றாக ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை போஸ்டராக அச்சிட்டு அதில் “ஹேப்பி ஹோலி” எழுதி ஊர் முழுவதும் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீட்டார் அந்த இளைஞர் மீது புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் சரோஜ் குமாரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர் ஒட்டிய போஸ்ட்கள் எல்லாம் கிழிக்கப்பட்டது. இது குறித்து சரோஜ் குமாரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.