
Cinema News
எம்.ஜி.ஆரோடு நடிக்கும் போது அதை செய்யக் கூடாது.. சிவக்குமாருக்கு படக்குழு போட்ட ரூல்ஸ்!..
Published on
By
ரஜினிகாந்துக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவக்குமார். 1965 ஆம் ஆண்டே தமிழ் சினிமாவில் காக்கும் கரங்கள் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமாகிவிட்டார் சிவக்குமார். அதன் பிறகு பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.
முக்கியமாக சிவாஜி,எம்.ஜி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களோடும் சிவக்குமார் நடித்துள்ளார். அதில் எம்.ஜி.ஆரோடு நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சிவக்குமார்.
Sivakumar
எம்.ஜி.ஆர் படங்களை பொறுத்தவரை அவருடன் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு பல விதிமுறைகள் உண்டு என கூறுகிறார் சிவக்குமார். அதாவது நல்ல பண்புகள் கொண்ட ஆட்களை மட்டுமே அவரது படங்களில் எம்.ஜி.ஆர் நடிக்க வைப்பாராம்.
குடி பழக்கம் போன்ற தவறான பழக்கங்கள் இருப்பவர்களை தனது படங்களில் அவர் அனுமதிக்க மாட்டார். இந்த நிலையில் இதய வீணை என்கிற திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சிவக்குமார். அப்போது படக்குழுவினர் சிவக்குமாரின் உயரத்தை அளந்து பார்த்துள்ளனர்.
ஏனெனில் எம்.ஜி.ஆரை விட உயரம் அதிகமாக இருந்தால் அவரை எம்.ஜி.ஆருடன் நடிக்க விட மாட்டார்களாம். சிவக்குமார் எம்.ஜி.ஆருக்கு நிகரான உயரத்தில் இருந்தார். எனவே எம்.ஜி.ஆருடன் வரும் காட்சிகளில் காலில் செருப்புதான் போட்டுக்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் எம்.ஜி.ஆர் உங்களை விட உயரமாக தெரிவார். எக்காரணம் கொண்டும் எம்.ஜி.ஆர் காட்சிகளில் ஷூ அணியக்கூடாது என படக்குழுவில் கூறியுள்ளனர். சிவக்குமாரும் அந்த மாதிரியே செருப்பை அணிந்து நடித்துள்ளார். இதை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Biggboss: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 8 சீசன்களாக இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும்...
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய...
Pradeep: தமிழ் சினிமாவில் ஒரு சென்ஷேசன் பிரபலமாக தற்போது அறியப்படுபவர் நடிகர் பிரதீப் ரெங்கநாதன். கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான...
சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் சினிமாவை பற்றிய அறிவு அதிகம்...
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...