
Cinema News
எம்.எஸ்.விக்கு அப்புறம் அந்த திறமை தேவாவுக்கு மட்டும்தான் உண்டு… வாலி சொன்ன சீக்ரெட்!..
Published on
By
கவிஞர் வாலி தமிழ் சினிமாவில் வெகு காலமாக பாடலாசிரியராக இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர் காலக்கட்டம் முதலே பாடல்களுக்கு வரிகளை எழுத துவங்கியவர். இதனால் பழைய தலைமுறைக்கும் புது தலைமுறைக்கும் வாலி ஒரு பாலமாக இருந்துள்ளார்.
தமிழில் உள்ள அனைத்து இசையமைப்பாளர்களோடும் வாலி பணியாற்றியுள்ளார். அதில் முக்கியமானவர் தேவா. இளையராஜா, ஏ.ஆர் ரகுமானுக்கு பிறகு தனக்கென தனிப்பட்ட இசை முறையை வைத்துக்கொண்டு ஹிட் பாடல்களாக கொடுத்து வந்தவர் தேவா.
Vaali
தேவா கானா பாடல்களுக்காக மிகவும் பிரபலமானவர். கானா பாடல்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை அவர்தான் உருவாக்கினார். வாலி ஒரு பேட்டியில் கூறும்போது தேவாவை பற்றிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
தேவாவின் திறமை:
பொதுவாக இசையமைப்பாளர்கள் என்பவர்கள் முதலில் அவர்கள் பாடல்களுக்கான இசையை அமைத்துவிடுவார்கள். அந்த மெட்டுக்கு தகுந்தாற் போல பாடலாசிரியர்கள் ஒரு பாட்டை எழுதுவார்கள். அதை பாடகர்கள் பாடுவார்கள். ஆனால் எம்.எஸ்.வி போன்ற சில ஜாம்பவான்கள் பாடல் வரியை வைத்து இசையமைக்க கூடியவர்கள்.
அதாவது ஒரு பாடலுக்கான வரியை முன்பே எழுதிக்கொடுத்துவிட்டால் அதற்கு தகுந்தாற் போல அவர்கள் இசையமைத்துவிடுவார்கள். கிட்டத்தட்ட அதே திறனை கொண்டிருந்தவர் தேவா என வாலி கூறுகிறார். எம்.எஸ்.விக்கு பிறகு அந்த திறமை தேவாவிற்கு மட்டுமே இருந்தது என அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என் கேரக்டரே வேற!.. என்னை யாருனு நினைச்சீங்க?.. பிக்பாஸில் சைலண்டா இருந்ததன் காரணத்தை கூறிய ஜித்தன் ரமேஷ்..
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய...
Pradeep: தமிழ் சினிமாவில் ஒரு சென்ஷேசன் பிரபலமாக தற்போது அறியப்படுபவர் நடிகர் பிரதீப் ரெங்கநாதன். கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான...
சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் சினிமாவை பற்றிய அறிவு அதிகம்...
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...