என்.எஸ்.கே மீது காதல் வந்தது அப்போதுதான் – டி.ஏ.மதுரத்தின் ரொமான்ஸ் ஸ்டோரி

Published on: May 18, 2023
nsk
---Advertisement---

ரசிகர்களால் கலைவாணர் என அழைக்கப்பட்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். நாடகங்களில் நடித்து பின் சினிமாவில் நுழைந்தவர். எம்.ஜி.ஆரை வழி நடத்திய மனிதர்களில் இவர் முக்கியமானவர். அதனால்தான் கடைசி வரை என்.எஸ்.கே மீது மிகுந்த அன்பையும், மதிப்பையும் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு பல அறிவுரைகளையும், நல்ல விஷயங்களையும் சொல்லி அவரை பக்குவப்படுத்தியவர் என்.எஸ்.கிருஷ்ணன்தான்.

nsk

என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவை மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களையும், அறிவுரைகளையும் சொன்னார். அதனால்தான் மறைந்த நடிகர் விவேக்கை சின்ன கலைவாணர் என எல்லோரும் அழைத்தனர். பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும் என்.எஸ்.கே நடித்துள்ளார்.

nsk

இவருடன் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் ஜோடியாக நடித்த டி.ஏ. மதுரத்தையே திருமணம் செய்து கொண்டார். என்.எஸ்.கே. தன்னை விரும்புவது மதுரத்திற்கு தெரியும் என்றாலும் அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிக்காமல் இருந்துள்ளார். ஒருமுறை வசந்தசேனா என்கிற படத்தில் நடிப்பதற்காக படக்குழுவுடன் கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் புனேவுக்கு சென்றனர்.

nsk
nsk

அப்போது ஒரு சின்ன பிரச்சனையால் புரடெக்‌ஷன் மேனேஜேர் படப்பிடிப்பில் இல்லை. எனவே, படக்குழுவினர் சாப்பாட்டு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளனர். அப்போது என்.எஸ்.கே தனது கையில் இருந்த பணத்தை கொடுத்து படக்குழுவுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து உதவியிருக்கிறார்.

என்.எஸ்.கேவின் இந்த உதவும் குணத்தை பார்த்த டி.என்.மதுரம் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லிவிட்டாராம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.