
Cinema News
இந்த டைட்டிலை எம்.ஜி.ஆர் எப்படி மிஸ் பண்ணார்?!.. குஷியில் துள்ளி குதித்த ரஜினி…
Published on
By
ஒரு படத்திற்கு யார் ஹீரோவாக நடிக்கிறார் என்பது எப்படி முக்கியமோ அதுபோல படத்தின் தலைப்பு மிகவும் முக்கியம். அதனால்தான் ஒரு படத்தின் டைட்டிலுக்கு இயக்குனர்கள் தலையை பிய்த்து கொள்கிறார்கள். ஏனெனில் ஒரு திரைப்படத்தின் அடையாளமே அப்படத்தின் தலைப்புதான். ஒரு படத்தின் தலைப்பு சரியில்லை எனில் அப்படம் ரசிகர்களை ஈர்க்காது. அதேபோல், ரசிகர்களை முதலில் ஈர்க்கும் விஷயமே தலைப்புதான்.
தமிழ் சினிமாவில் தலைப்பை மிகவும் கவனமாக தேர்ந்தெடுப்பர் மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர். அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், காவல்காரன், வேட்டைக்காரன் என அசத்தலான தலைப்புகளை தன் படங்களுக்கு வைப்பார். அதேபோல், ஏழைகளிடம் தலைப்பு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக தொழிலாளி, விவசாயி போன்ற தலைப்புகளை வைப்பார். அவருக்கு அமைந்தது போல் தலைப்புகள் வேறு எந்த நடிகருக்கும் அமையவில்லை.
ஆனால் ரஜினிக்கு சில தலைப்புகள் நன்றாக அமைந்தது. பாயும் புலி, பில்லா, முரட்டுக்காளை, ராஜாதி ராஜா, தர்மத்தின் தலைவன் என பல தலைப்புகளை சொல்லலாம். அதேபோல், எம்.ஜி.ஆர் பட பாணியில் மாவீரன், வேலைக்காரன், பணக்காரன், மன்னன் ஆகிய தலைப்புகளை தனது படங்களுக்கு ரஜினி வைத்தார்.
rajini
ஒருமுறை விஜய வாகினி ஸ்டுடியோ தயாரிப்பில் ரஜினியை வைத்து ஒரு படத்தை எடுத்தனர். அப்படத்திற்கு பி.வாசு இயக்குனர் என முடிவானது. ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு பி.வாசுவுக்கு ஒரு தலைப்பு தோன்றியுள்ளது. உடனே ரஜினிக்கு போன் செய்துள்ளார். ரஜினி போனை எடுத்ததும் ‘சார் ஒரு சூப்பர் டைட்டில் சிக்கியிருக்கு’ என சொல்ல ரஜினி ஆர்வமாக ‘அது என்ன தலைப்பு சொல்லுங்கள்’ என கேட்க பி.வாசு சொன்ன தலைப்புதான் ‘உழைப்பாளி’. இதைக்கேட்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரஜினி ‘எம்.ஜி.ஆர் எப்படி இந்த தலைப்பை விட்டு வைத்தார்?.. பிரமாதம்’ என வாசுவை பாராட்டினாராம்.
இந்த தகவலை வாசுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
கரூரில் நடந்த கோர சம்பவம் : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையின் போதும் தனது தேர்தல்...
Karur: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை குறி...
Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித்...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...