
Cinema News
கோபத்துல நயன்தாராவை வரக்கூடாதுன்னு சொன்னேன்!.. ஆனா இப்போ?!.. புலம்பும் பார்த்திபன்…
Published on
By
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் அங்கு தொலைக்காட்சியில் ஆங்கராகவெல்லாம் வேலை செய்துள்ளார். அதன்பின் படிப்படியாக முன்னேறி இப்போது பெரிய இடத்திற்கு வந்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருக்கிறார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை காதலித்து ஒரு வருடத்திற்கு முன் திருமணமும் செய்து கொண்டார்.
Nayanthara
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகளில் அதிக சர்ச்சைகளிலும், செய்திகளிலும் சிக்கிய நடிகையாக இருப்பவர் இவர் மட்டும்தான். கடந்த சில வருடங்களாகவே விஜய், அஜித், ரஜினி, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடிபோட்டு நடித்து வருகிறார். அதேபோல், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்து வருகிறார்.
சினிமாவில் நுழைய முயற்சி செய்த போது பல கஷ்டங்களை நயன்தாரா சந்தித்துள்ளார். பல வாய்ப்புகளை இழந்தும், சில வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியும் முன்னேறினார். பல படங்களில் நடித்தும் இவர் ரசிகர்களிடம் பிரபலமாகவில்லை. 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தபின்னரே இவர் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் பார்த்திபன் ‘நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு நான் இயக்கிய ‘குடைக்குள் மழை’ படத்தில் நடிக்க வைக்க அவரை ஒருநாள் காலை 8 மணிக்கு வர சொன்னேன். ஆனால், அன்று அவர் வரவில்லை. எனக்கு போன் செய்து ‘சார் என்னால் நேற்று வரமுடியவில்லை. இன்றுதான் பஸ் ஏறுகிறேன். நாளை காலை கண்டிப்பாக வந்துவிடுகிறேன்’ என சொன்னார். கோபத்தில் இருந்த நான் ‘இல்லை வர வேண்டாம்’ என சொல்லிவிட்டேன். எனக்கு அப்படித்தான் கோபம் வரும். இப்போது அவர் லேடி சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டார்’ என கூறியிருந்தார்.
தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடியபோது அம்மாவுடன் கேரளாவிலிருந்து சென்னைக்கு நயன்தாரா பேருந்தில்தான் வருவார். தற்போது தனி விமானத்தில் செல்லும் அளவுக்கு மாறிவிட்டார்.
நயன்தாரா கதாநாயகியாக நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...
Ajith Vijay: கோலிவுட்டில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். சின்ன பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்திருக்கிறார்....
Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5...
Vijay TVK: சினிமாவில் உச்சம் தொட்டு அடுத்து அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு வந்தார் விஜய். ஆரம்பத்தில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான...
Vijay: தற்போது அரசியல் களத்தில் தவெக கட்சிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பெரும்...