
Cinema News
மம்முட்டி நடிக்க வேண்டிய படத்துல நடிச்ச விஜயகாந்த்.. கடைசி நேரத்தில் மாறியது எப்படி?..
Published on
By
சினிமாவில் ஒரு ஹீரோ நடிக்க வேண்டிய கதையில் அவர் நடிக்க முடியாமல் போக அல்லது அவர் நடிக்க விருப்பமில்லாமல் போக இன்னொரு ஹீரோ நடிப்பது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது.. ரஜினிக்கு வந்த கதையில் கமலும், கமல் நடிக்க வேண்டிய கதையில் ரஜினியும், அஜித் நடிக்க வேண்டிய படத்தில் சூர்யாவும், விஜய் நடிக்க மறுத்த கதையில் விஷாலும் நடித்துள்ளனர். சினிமாவில் இப்படி நடப்பது சகஜமான ஒன்றாகும்.
சினிமாவில் நடித்து வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராக மாறினார். அவரின் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் பெயரில் பட நிறுவனம் துவங்கி உழவன் மகன், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வந்த மனோபாலா இப்ராகிம் ராவுத்தர் பட நிறுவனத்துக்காக இயக்கிய திரைப்படம் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். இந்த படத்தில் முதலில் மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பதாக இருந்தது. அவருக்கு ஏற்றார்போல் மனோபாலா கதையை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால், இந்த கதையில் விஜயகாந்தே நடிக்கட்டும். கதையை மாற்றுங்கள் என ராவுத்தர் சொல்லவே அந்த கதையை விஜயகாந்துக்கு ஏற்றது போல் மனோபாலா மாற்றினார். இப்படத்திற்கு இளைய கங்கை என்பவர் இசையமைத்திருந்தார். இப்படம் நல்ல லாபத்தை கொடுத்தது.
இப்படம் 1991ம் வருடம் நவம்பர் மாதம் வெளியானது. இதில், விஜயகாந்துக்கு ஜோடியாக ரூபினியும் மற்றும் மன்சூர் அலிகானும், ஆனந்தராஜும் நடித்திருந்தனர்.
Pradeep: தமிழ் சினிமாவில் ஒரு சென்ஷேசன் பிரபலமாக தற்போது அறியப்படுபவர் நடிகர் பிரதீப் ரெங்கநாதன். கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான...
சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் சினிமாவை பற்றிய அறிவு அதிகம்...
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....