
Cinema News
வண்டிக்கு பின்னாடி போய் ட்ரெஸ் மாத்துனாலும் எட்டிக்கிட்டு பார்ப்பாங்க!. நடிகைக்கு நடந்த சோகம்..
Published on
By
சினிமாவில் கதாநாயகர்களுக்கு இருக்குமளவிற்கான வரவேற்பும் வாய்ப்புகளும் கதாநாயகிகளுக்கு அதிகமாக இருப்பதில்லை. இப்போதைய காலக்கட்டத்தில் ஓரளவிற்கு வாய்ப்புகள் உள்ளன என்றாலும் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் நடிகைகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்கவில்லை.
விஜயகாந்த், சத்யராஜ் காலக்கட்டத்தில் எல்லாம் சினிமாவில் கேரவான் என்கிற சொகுசு வண்டி முறை இல்லாமல் இருந்தது. இதனால் படப்பிடிப்பு தளங்களில் எங்காவது ஓரமாக குடையை போட்டு அதில்தான் நடிகர்களே அமர்ந்திருப்பார்களாம்.
இதையும் படிங்க: என்ன இருந்தாலும் மருமகன் இல்லையா? தனுஷுக்காக அந்த விஷயத்தில் மறைமுகமாக உதவிய ரஜினி
இந்த காலங்களில் எல்லாம் நடிகைகள் வெகுவாக இதனால் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் ஆண்களை விடவும் பெண்களுக்கு பொது இடங்களில் உடை மாற்றுவது என்பது கடினமான காரியமாகும். அதிலும் மாதவிடாய் சமயங்களில் படப்பிடிப்பு தளத்தில் சமாளிப்பது அவர்களுக்கு கடினமான காரியமாக இருக்கும்.
ஆரம்பத்தில் இருந்த பிரச்சனை:
சினிமாவில் பல படங்களில் நடித்த பிரபலமான நடிகையான சுலோக்சனா ஒரு பேட்டியில் இந்த பிரச்சனைகள் குறித்து கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது பொதுவாக நடிகைகள் எல்லாம் படப்பிடிப்பு தளத்தில் நான்கு பக்கமும் புடவையை கட்டி அதற்குள்தான் உடை மாற்றுவோம். பயணத்தில் இருக்கும்போது கூட வண்டியை நிறுத்தி காருக்கு பின்னாலேயே உடையை மாற்றிவிட்டு வருவோம்.
இதையும் படிங்க:‘மாவீரன்’ படத்தில் சர்ப்ரைஸ் கதாபாத்திரம்! இந்த நடிகரா? ஒழிச்சு வச்சு வேடிக்கை பார்த்த படக்குழு
ஆனால் அப்படியும் கூட அங்கிருக்கும் நபர்கள் நாங்கள் புடவை மாற்றுவதை பார்ப்பதற்கு முயற்சிப்பார்கள் என கூறியுள்ளார். அந்த அளவிற்கு கதாநாயகிகள் அப்போது கஷ்டங்களை அனுபவித்துள்ளனர் என தனது பேட்டியில் கூறியுள்ளார் சுலோக்ஷனா.
இதையும் படிங்க:பெரிய நடிகர் ஒன்னும் கிடையாது! ஆனால் பேய் ஓட்டம் ஓடிய திரைப்படங்கள்
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...
Karur: தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த...
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...