
Cinema News
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில இதுதான் நடந்தது!..
Published on
By
கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நாடகத்தில் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருந்தவர் செந்தில். கவுண்டமணி எப்படி படிப்படியாக முன்னேறினாரோ அப்படி செந்திலும் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், கவுண்டமணி அளவுக்கு செந்தில் பிரபலமாகவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் சில படங்களில் இணைந்து காமெடி காட்சிகளில் நடிக்க அது ரசிகர்களை கவர்ந்து அவர்களிடம் வரவேற்பை பெற்றது.
அதன் பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கவுண்டமணி – செந்தில் இருவரின் காமெடி காட்சிகள் தங்களின் படங்களில் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். அப்படி பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர். ‘அண்ணே. அண்ணே’ என செந்தில் பேசும் ஸ்டைலையும், ‘டேய் கோமுட்டி தலையா, தேங்காய் தலையா’ என கவுண்டமணி அவரை அழைப்பதையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.
பல வருடங்கள், பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஒருமுறை ‘என்னால்தான் உங்கள் காமெடியை மக்கள் ரசிக்கிறார்கள். நான் இல்லையேல் உங்கள் காமெடி வேலைக்கு ஆவாது’ என்கிற ரேஞ்சுக்கு செந்தில் பேசிவிட ‘சரிடா ரெண்டு பேரும் தனித்தனியாக படம் பண்ணுவோம். பாப்போம்’ என கவுண்டமணியும் சவால் விட்டார். அதன்பின் இருவரும் பல படங்களில் தனித்தனியாக நடித்தனர்.
கவுண்டமணி ஹீரோக்களுடன் இணைந்து இரண்டாவது கதாநாயகன் போல நடிக்க துவங்கினார். எனவே, அவரை மக்கள் ரசித்தனர். ஆனால், செந்தில் தனியாக நடித்த படங்களில் அவரின் காமெடி பெரிதாக் ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே, செந்தில் தனது தவறை புரிந்துகொண்டார். அதேபோல், கவுண்டமணியின் காமெடியை மக்கள் ரசித்தாலும் ‘செந்தில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்’ என ரசிகர்கள் பேச கவுண்டமணியும் அதை புரிந்துகொண்டார்.
ஒருகட்டத்தில் கவுண்டமணியிடம் செந்தில் சரணடைந்து ‘உங்க கூட சேர்ந்து நடிச்சாதான் என்னையே ரசிப்பாங்க’ என சொல்லி, அதன்பின் அவருடன் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.
அதன்பின் பல படங்களில் ஒருவரும் ஒன்றாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர். இப்போது இருவருமே திரைப்படங்களில் நடிப்பதில்லை. இன்னமும் கூட அவர்களின் இடத்தை யாராலும் நிரப்பமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ் ஹீரோலாம் இப்படி நடிப்பாங்களா?.. நான் ஏன் நடிக்கணும்!. படப்பிடிப்பில் அடம்பிடித்த மம்முட்டி..
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...
Ajith Vijay: கோலிவுட்டில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். சின்ன பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்திருக்கிறார்....
Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5...
Vijay TVK: சினிமாவில் உச்சம் தொட்டு அடுத்து அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு வந்தார் விஜய். ஆரம்பத்தில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான...
Vijay: தற்போது அரசியல் களத்தில் தவெக கட்சிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பெரும்...