அவசர புத்தியால் நிலைதடுமாறிய ரஜினி! ‘ராஜாதிராஜா’ படத்தில் ஏன் அந்தப் பாடல் இடம்பெறவில்லை தெரியுமா?

Published on: August 14, 2023
rajini
---Advertisement---

தமிழ் சினிமாவில் ரஜினி எப்பேற்பட்ட புகழை அடைந்திருக்கிறார் என்பதை சொல்லி விளக்க வேண்டியதில்லை. அவரின் நடிப்பில் வெளியான படங்கள் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறது. தற்போது தமிழ் சினிமாவின் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார் ரஜினி.

இந்த நிலையில் ஆர்.சுந்தராஜ் இயக்கத்தில் பாஸ்கரன் தயாரிப்பில் வெளியான படம் ராஜாதிராஜா. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க : கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!.. ஹாட் லுக்கில் சூடேத்தும் பிரியங்கா மோகன்!…

அதுவும் இளையராஜா இசையில் அமைந்த அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அந்தப் படத்தில் இளையராஜா நெஞ்சத்தை தொட்டு சொல்லு என்ற ஒரு ஸ்லோ மோஷனான பாடலை இசையமைத்துக் கொடுத்தாராம்.

அந்தப் பாடலை கேட்ட அனைவரும் படம் போற ஸ்பீடுக்கு இந்தப் பாடல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என சொல்லியிருக்கிறார்கள். ரஜினிக்கும் இதே மாதிரியான உணர்வுதான் இருந்திருக்கிறது.

அதனால்தான் ஆர் .சுந்தராஜிடமும் பாஸ்கரனிடம் இந்தப் பாடலை நீக்குமாறு ரஜினி சொல்லியிருக்கிறார். அவர்களும் சரி அப்படியே செய்துவிடலாம் என சொல்லியிருக்கின்றனர். ஆனால் படம் வெளியீட்டிற்கு முன் ஒரு சில தியேட்டர்களில் படம் புரஜக்‌ஷன் போட்டுக் காட்டப்பட்டதாம்.

இதையும் படிங்க : சன் டேவா சூப்பர்ஸ்டார் டேவா!.. பொன்னியின் செல்வன் 2 வாழ்நாள் வசூலுக்கு வேட்டு!..

அப்போது அந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது. அதை பார்த்த ஒரு சில பேர் அந்தப் பாடலை வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள். நல்ல வரவேற்பையும் பெற்றதாம். இது ரஜினியின் காதுக்கு செல்ல மீண்டும் ஆர்.சுந்தராஜிடமும் பாஸ்கரனிடம் பாடல் படத்தில் இருக்கட்டும் என சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதற்குள் படம் ரிலீஸாகி அந்தப் பாடலும் படத்தில் இல்லாமல் போய்விட்டதாம். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.