தமிழ் சினிமாவின் முதல் கோடீஸ்வரர் இவர்தானாம்! கோடீஸ்வரராக்கிய அந்த திரைப்படம் எது தெரியுமா?

Published on: October 15, 2023
vasan
---Advertisement---

Chandralekha: சினிமாவைப் பொறுத்தவரைக்கும் இன்று பல முன்னனி நடிகர்கள் நடிகைகள் என தனது சம்பளமாக கோடிகளில் வாங்கி இரைத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் ரஜினி, விஜய், அஜித், கமல் போன்ற நடிகர்களின் சம்பளம் 100 லிருந்து 150 கோடி வரை எகிறியிருக்கிறது.

கோடிகளில் சம்பளம் என்பது இன்றைய சினிமாவில் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. ஆனால் அந்தக் காலங்களில் அதாவது எம்ஜிஆர், சிவாஜி இருந்த காலங்களில் அவர்களின் சம்பளம் ஆரம்ப நிலையில் ஆயிரங்களில் தான் இருந்திருக்கின்றது.

இதையும் படிங்க: அச்சு அசல் தன்னை போலவே!.. அந்தரங்க வீடியோவால் அழுது புலம்பிய இளம் நடிகை.. எங்க போய் முடியப்போகுதோ?..

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து லட்சங்களில் சம்பளங்களை வாங்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முதல் கோடீஸ்வரர் யார் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.

ஆனந்த விகடன் பத்திரிக்கையின் நிறுவனரான எஸ்.எஸ். வாசன் தான் தமிழ் சினிமாவின் முதல் கோடீஸ்வரராம். அதுவும் அவர் தயாரித்த சந்திரலேகா என்ற படம்தான் அவரை கோடிஸ்வரராக்கியிருக்கிறது.

இதையும் படிங்க: வாய் கொடுத்து புண்ணாக்கிக் கொண்ட சினிமா பிரபலம்.. தலைவர் ரசிகர்களை குளிர வைத்த லோகேஷ் கனகராஜ்!..

1948 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தை இயக்கி தயாரித்தது எஸ்.எஸ்.வாசன்தான். இந்தப் படத்தில்  எம். கே. ராதா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படமாகவும் சந்திரலேகா அமைந்தது.

ss
ss

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்ட முதல் பிரம்மாண்ட தமிழ் படமாக,  ஒட்டுமொத்த சினிமாவையுமே திரும்பி பார்க்க வைத்த படமாக சந்திரலேகா விளங்கியது.  எஸ்.ராஜேஸ்வரராவ் இசையில் படத்தின் எல்லா பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. எம்.டி பார்த்தசாரதி பின்னணி இசை அமைத்திருந்தார்.

இதையும் படிங்க: மிஸ்ஸான லியோ!.. மொத்த படத்தையும் வாங்கி குவிக்கும் ரெட் ஜெயன்ட்.. புதுசா சிக்கியது எது தெரியுமா?..

இந்த படத்தை தயாரிக்க மூன்றரை ஆண்டுகாலம் ஆனதாம். இந்தப் படத்திற்காக எஸ்.எஸ்.வாசன் ஒதுக்கிய தொகை 30 லட்சமாம். இன்றைய மதிப்பீட்டின் படி 300 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.