Connect with us
MSBRTSA

Cinema News

திரிஷா அப்பவே இத பண்ணியிருந்தா பிரச்சனையே இல்ல!.. கேப்பில் கெடா வெட்டும் பயில்வான்!..

மன்சூர் அலிகான், திரிஷா விவகாரம் மீடியாக்களில் கடந்த சில தினங்களாக சூடுபிடித்துள்ள நிலையில், பிரபல நடிகரும், யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

லியோ படத்தோட சக்சஸ் மீட்ல மன்சூர் அலிகான் பேசினார். அப்போ திரிஷாவோட ரேப்பிங் சீன் இருக்கணும்னு சொன்னாரு. நிறைய பேரு எதிர்ப்பு தெரிவிப்பாங்கன்னு நினைச்சேன். இல்ல. அப்போ திரிஷா சிரிச்சிட்டு இருந்தாங்க.

அப்போ மடோனா…. என் சகோதரியா ஆயிட்டாங்கன்னாரு. அதுக்கு கொஞ்சம் ரியாக்ஷன் கொடுத்து சிரிச்சது அந்த அம்மா.

Mansoor

Mansoor

அப்போ தப்பா எடுக்கல. ஆனா தனியா பிரஸ் மீட்ல பேசும்போது… ஆ… இவரு என்னை அவமரியாதையா பேசிட்டாரு. மகளிர் ஆணையத்துல கேஸ் போட்டாங்க. அது விசாரணைக்கு வந்தது.

அதனால ஒருத்தன் நம்மளை நக்கல் பண்றான்னு தெரிஞ்ச உடனே ஏய்.. இந்த வேலையை எல்லாம் எங்கிட்ட வச்சிக்காதன்னு அப்பவே சொல்லியிருந்தா, இவ்ளோ இது வளர்ந்துருக்குமா..? அப்போ தப்பு யாரு மேலன்னு தன் பங்கிற்கு விமர்சனத்தை முன் வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதுமட்டும் அல்லாமல், இப்படியும் சொல்கிறார் பயில்வான்.

திரிஷாவைத் தேவதை மாதிரி காட்னாங்கன்னும் சொன்னது மன்சூர் அலிகான் தானே. அப்போ இது பெருமையான விஷயம் தானே. அதே விஷயங்க. ஆர்.கே.செல்வமணி தான் கரெக்டா பேசினாரு. அவர் அமைச்சர், நடிகை ரோஜாவோட வீட்டுக்காரர்.

அவரு தான் மன்சூர் அலிகானையும் ஹீரோவா அறிமுகப்படுத்தினாரு. அதே மாதிரி அவரோட ரோஜா படத்துலயும் நடிக்க வச்சிருந்தாரு. அதனால தான் ரோஜாவ படுக்கைல போட்ட மாதிரின்னு மன்சூர் அலிகான் பேசினாரு. அதே சமயத்துல அந்த வார்த்தை திரிஷாவைக் காயப்படுத்திருச்சி.

என பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தார்…

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top