யாரும் ‘தல’னு சொல்லாதீங்க! ஏகேனு சொன்னாலே போதும் – அஜித் சொன்னதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா?

Published on: November 25, 2023
ajith
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். பெரிய புகழும் வரவேற்பும் கொண்டவராக திகழும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜானில் நடந்து வரும் நிலையில் நேற்று திடீரென சென்னை வந்தார் அஜித். அவர் விமான  நிலையத்தில் வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. எந்தவொரு ஆடம்பரமும் பந்தாவும் இல்லாத நடிகராக அஜித் இன்று வரை திகழ்கிறார்.

இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜி சொன்ன கதையில் நடிக்க சம்மதித்த விஜய்!. அட இது எப்படா நடந்துச்சி!…

மிகப்பெரிய மார்கெட்டை கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய ரசிகர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் அஜித். அதாவது ரசிகர் மன்றமே இருக்கக் கூடாது, தனக்காக பாலாபிஷேகம் செய்யக் கூடாது, அவரவர் குடும்பத்தை கவனித்தால் மட்டும் போதும் என்ற அன்பான வேண்டுகோளை ரசிகர்களுக்காக விடுத்தவர்.

அதுமட்டுமில்லாமல் இனிமேல் தன்னை தல என யாரும் அழைக்க கூடாது  என்றும் அஜித்குமார் அல்லது ஏகே என்று அழைத்தாலே போதும் என்று கூறியிருந்தார். அதற்கான பின்னனி காரணம் என்ன என்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: சிவாஜி ஆண்டி ஹீரோவாக நடித்த முதல் படம்..! 17 நாளில் ஷூட்டிங்கை முடித்த பிரபல இயக்குனர்..!

அதாவது அஜித் நடிப்பில் வெளியான ஆஞ்சனேயா திரைப்படத்தில் அஜித்திற்கு காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர் ஷாலினிதானாம். அதிலும் குறிப்பாக அந்தப் படத்தில் பாவாடை என்ற ஒரு பாடல் வரும். அந்தப் பாட்டில் அஜித் பிரிண்டட் போடப்பட்ட சட்டையை அணிந்திருப்பார்.

அதில் AK என பிரிண்ட் செய்யப்பட்ட சட்டையை ஷாலினி டிசைன் செய்து கொடுத்தாராம். அதாவது அஜித்தை ஏகே என்று தான் ஷாலினி அழைப்பாராம். அதுதான் ஷாலினிக்கும் பிடிக்குமாம். அதனால்தான் அஜித்தும் ரசிகர்களிடம் இனிமேல் ஏகே என்றே அழையுங்கள் என சொல்லியிருக்கிறார் என்ற செய்திதான் வைரலானது.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரஜினிகிட்ட விஜய் கத்துக்கணும்… மாறுவாரா தளபதி?..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.