Cinema News
அஜித்தின் ஆசைக்கு குறுக்கே வந்த சூர்யா!.. தள்ளிப்போன அந்த படம்!. இப்ப எல்லாமே மாறிப்போச்சே!..
Published on
By
Ajithkumar: சினிமாவை பொறுத்தவரை ஒரு பிராஜெக்ட் அமைய வேண்டுமானால் எல்லாம் சரியாக அமைய வேண்டும். தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆகிய எல்லோரும் ஒரு அலைவரிசையில் வரவேண்டும். 3 பேருக்கும் அந்த படத்தை எடுப்பதில் ஆர்வமும், நேரமும் இருக்க வேண்டும். இல்லையேல் படம் டேக் ஆப் ஆகாது.
இயக்குனரும், நடிகர் ரெடி எனில் தயாரிப்பாளர் வரமாட்டார். தயாரிப்பளும், நடிகரும் ரெடி எனில் இயக்குனர் ஒரு படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்பார். தயாரிப்பாளர் இல்லை என்றால் வேறு தயாரிப்பாளரை தேடி நடிகரும், இயக்குனரும் போவார்கள். அவர்கள் நினைத்த ஹீரோ கிடைக்கவில்லை எனில் தயாரிப்பாளரும், இயக்குனரும் வேறு ஒரு நடிகரை தேடிப்போவார்கள். இது சினிமாவில் நடப்பது இயல்புதான்.
இதையும் படிங்க: பைக் ஓட்ட போயிட்டா சினிமா எப்படி எடுக்க!.. அறிவுரை சொன்னவருக்கு அஜித் கொடுத்த பதில் இதுதான்!…
ஏனெனில், திரையுலகில் யாருக்காவும் காத்து கொண்டிருக்க முடியாது. அதனால்தான் ஒரு ஹீரோவிடம் சொல்லப்பட்ட கதையில் இன்னொரு ஹீரோ நடிப்பார். ரஜினி, கமல், விஜய், அஜித் என எல்லோருக்கும் இது நடந்துள்ளது. இதனால், ஹீரோக்கள் மட்டும் இயக்குனர் மீது கோபம் கொள்வார்கள். அதேநேரம், இதை தடுக்கவே முடியாது. இதை அதிகமாக சந்தித்தவர் நடிகர் அஜித் மட்டுமே.
தீனா படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் அவரிடம் ஒரு கதை சொன்னார். அஜித் அவரை சில மாதங்கள் காத்திருக்க சொன்னார். ஆனால், அதே கதையை சூர்யாவிடம் சொல்லி கஜினி படமாக எடுத்தார். இதில், கோபமடைந்த அஜித் அதன்பின் முருகதாஸை அழைக்கவே இல்லை.
இதையும் படிங்க: கதை கேட்குறதுல அஜித் ஃபாலோ பண்ணும் நடிகர் யார் தெரியுமா?!. அட ஆச்சர்யமா இருக்கே!..
இப்போது விடாமுயற்சி படம் முடிந்த பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க திட்டமிடிருந்தார். ஆனால், சூர்யாவை வைத்து சிவா இயக்கி வரும் கங்குவா படம் இழுத்துக்கொண்டே போகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளதால் அது முடிய அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஆகிவிடும். அதன்பின் அவர் சில மாதங்கள் கதை எழுதி படம் ஆரம்பிக்க அடுத்த வருட இறுதி வந்துவிடும்.
அதனால்தான், அதற்கு இடையில் வேறு ஒரு படத்தில் நடிக்க அஜித் முடிவெடுத்தார். அப்படித்தான் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளே வந்துள்ளார். இப்படம் பற்றிய அறிவிப்பு விடாமுயற்சி படத்திற்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உதவி கேட்டவரை கண்டுகொள்ளாமல் போன அஜித்… பின்னாடி அவர் செஞ்ச வேலைய பத்தி தெரியுமா?…
Kamalhaasan: பொதுவாக எல்லா துறைகளிலுமே ஒன்றை கொண்டாட பார்ட்டி நடத்துவார்கள். சினிமா துறையில் இது மிகவும் அதிகம். ஒரு படத்தின் பூஜை,...
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பாட்டி வர முத்து சந்தோஷமாகிறார். உங்க கல்யாண நாளுக்கு தான் வந்திருக்கேன் என்கிறார். பின்னர், முத்து...
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். கோபி எவ்ளோ பெரிய விஷயம் செஞ்சிருக்கான் நீ என்கிட்ட...
தமிழ்த்திரை உலகில் நடிகர், கதாசிரியர், இயக்குனர், இசை அமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் கே.பாக்கியராஜ். தமிழ்சினிமா உலகின் தந்தை டி.ராமானுஜம் அவர்களுக்கு...
ஒரு காலத்தில் பிரபல பின்னணிப் பாடகியாக இருந்த சுசித்ரா விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். திரிஷா நடிப்பில் வெளியான...