Connect with us
archana

Biggboss Tamil 7

இனிமேதான் எங்க ஆட்டத்த பாக்கப் போறீங்க! அர்ச்சனா எடுத்த முடிவு – தோள்கொடுக்கும் விசித்ரா

Archana: நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில்  புயல் காரணமாக எலிமினேஷன் கிடையாது என கமல் அறிவித்தார். அது ஒரு சில பேருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் இரண்டு நாள்களாக கமல் பி டீமை வறுத்து எடுத்தார்.

இதனால் ரசிகர்கள் கமல் மேல் அதிருப்தியில் உள்ளனர். அதாவது இரு தரப்பு வாதங்களையும் விசாரித்து இரு தரப்பையும் கண்டித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு  விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மணி என இவர்களை மட்டுமே குறி வைத்து தாக்கியதை போல இருந்தது.

இதையும் படிங்க: பாதி படத்துல சம்பளத்தை ஏத்திக்கேட்ட சிம்பு!.. உருப்புடாம போனதுக்கு இதுவும் முக்கிய காரணம்…

பூர்ணிமா பேசிய தகாத வார்த்தை பற்றியும் வீட்டிற்குள் ஆலோசனை நடந்தது. அதை பற்றி கமல் கேட்கவே இல்லை. உண்மையான கலர் என்று மணி சொன்னது நிக்‌ஷனின் உண்மையான முகம் என்பதைத்தான். ஆனால் கமலோ அது அவரிடன் நிறத்தை சொன்னதாக பொருள் கொண்டு மணியையும் போட்டுத்தாக்கினார்.

எப்படியோ இந்த எபிசோடிற்கு பிறகு பி டீம் இனிமேல் அவர்களது ஆட்டத்தை மாற்றுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முன்னோடியாக அர்ச்சனா நேற்றைக்கே அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்காக விட்டுக்கொடுத்த சிவாஜி.. நடிக்காம இருந்தாலும் நடிகர் திலகம்தான்…

அதுமட்டுமில்லாமல் இனிமேல்  நான் தனியாகத்தான் விளையாட போகிறேன். யார் சொல்வதையும் கேட்கப் போவதில்லை. இது வரை எப்படியோ இருந்து விட்டேன். இனிமேல் எனக்காவும் என் விளையாட்டிற்காகவும்தான் நான் இருக்கப் போகிறேன். தேவையில்லாமல் மற்றவர்களின் பிரச்சினையிலும் மூக்கை விட மாட்டேன் என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் அர்ச்சனா விசித்ராவிடமும் சில விஷயங்களை கூறும் போது அர்ச்சனாவை கட்டியணைத்து கொண்டு மாறி மாறி முத்தமழை பெய்து கொள்கிறார்கள். இனிமேல் உன்னை தனியாக விட மாட்டேன் என்று அர்ச்சனாவை பார்த்து விசித்ரா கூறுகிறார். இனிவரும் காலங்களில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: எனக்கு அது இல்லாம இருக்க முடியாது! ‘பொம்பள சோக்கு’க்கு சரியான விளக்கத்தை கொடுத்த பப்லு

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top