
Cinema News
நீங்க பண்ணது ஓவர் ஆக்டிங்!. சிவாஜியிடமே சொன்ன இயக்குனர்!. நடிகர் திலகம் ரியாக்ஷன் இதுதான்!..
Published on
By
Sivaji Ganesan: சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகர் திலகம் என்கிற பட்டத்தை பெற்றவர்தான் சிவாஜி கணேசன். முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தவர் இவர். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் பல வருடங்கள் நாடகங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டவர் இவர்.
அதனால்தான் திரைப்படங்களில் எந்த மாதிரியான வேடம் என்றாலும் அவரால் அசால்ட்டாக செய்ய முடிந்தது. சிவாஜி ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லுமளவுக்கு எண்ணற்ற வேடங்களில் நடித்திருக்கிறார். ஏழை, பணக்கார முதலாளி, திருடன், வக்கீல், மருத்துவர், புராணங்களில் வந்த கதாபாத்திரங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், கடவுள் அவதாரங்கள் என ஒரு கலக்கு கலக்கியவர்தான் சிவாஜி.
இதையும் படிங்க: சிவாஜிக்கு வாக்கு கொடுத்த ஜெய்சங்கர்!.. கடைசி வரை செய்ய முடியலையே!…
60களில் அவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியானது. 70களில் கொஞ்சம் வயதாகி நடுத்தர வயது வேடங்களில் நடித்தார். 80களில் கிட்டத்தட்ட அப்பா வயது ஆகிவிட்டாலும் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்தவர் இவர். நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் என சொல்லப்பட்டாலும் ‘சிவாஜி எப்போதும் ஓவர் ஆக்டிங் செய்வார்’ என்கிற விமர்சனம் அவர் மீது உண்டு.
என் நடிப்பு அனைத்து மக்களிடமும் சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி நடிக்கிறேன் என சிவாஜி விளக்கமும்கொடுத்தார். அதேபோல், அவர் மீதான விமர்சனங்களை மதித்து அதை ஏற்றும் கொள்வார். இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் சிவாஜி ஒரு படத்தில் நடித்துகொண்டிருந்தார். அப்போது அந்த படத்தில் பாஸ்கர் என்பவர் உதவி இயக்குனராக வேலை செய்தார். ஒரு காட்சியில் சிவாஜி நடித்து முடித்துவிட்டார்.
இதையும் படிங்க: இவன் தேற மாட்டான்!. வாய்ப்பு கேட்டு போன சிவாஜியை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்…
ஆனால், ‘சிவாஜி இந்த காட்சியில் ஓவர் ஆக்டிங் செய்து விட்டார். கொஞ்சம் குறைத்து நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என பாஸ்கர் தனது சக உதவி இயக்குனர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். சற்று தூரத்தில் இருந்த சிவாஜிக்கு இது கேட்டுவிட்டது. எனவே, அவர்களிடம் வந்து ‘என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என கேட்க, அவர்களோ சிவாஜியிடம் அதை சொல்ல தயங்கியுள்ளனர்.
sivaji
அதைப்பார்த்த சிவாஜி ‘தயங்காதீங்க.. சொல்லுங்க’ என சொல்ல, ‘இந்த காட்சியில் நீங்கள் ஓவர் ஆக்டிங் செய்துவிட்டதாக பாஸ்கர் சொல்கிறார்’ என சொல்லிவிட்டனர். அதைக்கேட்டு சிவாஜி கோப்படவில்லை. ‘பாஸ்கர் சொல்வது சரிதான்.. நடித்து முடித்த பின் எனக்கும் அதுதான் தோன்றியது’ என சொல்லிவிட்டு நேராக ஸ்ரீதரிடம் சென்று அந்த காட்சியை மீண்டும் எடுக்க சொன்னார். இந்தமுறை கட்சிதமாக நடித்தார் சிவாஜி. அதனால்தான் நடிகர் திலகமாக ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறார்.
இந்த பாஸ்கர்தான் பின்னாளில் ரஜினி முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமான ‘பைரவி’ படத்தை இயக்கியவர். மேலும், தீர்ப்புகள் திருத்தப்படலாம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், சூலம் உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வார்னிங் கொடுத்த சிவாஜி… கோபப்பட்ட இயக்குனர்.. கடைசில தோல்வியை சந்திச்சதுதான் மிச்சம்…
Idli kadai: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார்....
Vijay: கரூரில் நடந்த அந்த கோர சம்பவத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. விஜயின் தேர்தல் பரப்புரையின் போது 41...
Rajinikanth: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமா அளவிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்து 50...
Soori: கோலிவுட்டில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சூரி. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த சூரி வெண்ணிலா கபடிக்குழு...
Vijay Devarakonda: கன்னட சினிமாவில் நடிக்க துவங்கி அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று ரசிகர்களிடம் பிரபலமாகி தமிழ், ஹிந்தி என கலக்கி...