Connect with us

Cinema News

கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியா இருந்தா எப்படிடா?.. ஜோஷ்வாவை பொளந்த ப்ளூ சட்டை மாறன்!..

மணி சார் படங்களே கேவலமாத்தான் இருக்கும். கெளதம் மேனன் உடம்புக்குள்ள மணி சார் ஆவி புகுந்து எடுத்தா அந்த படம் இன்னும் கேவலமா இருக்கும். அப்படித்தான் ஜோஷ்வா இமை போல் காக்க படம் உள்ளதாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் பொளந்துக் காட்டியிருக்கிறார்.

வெளிநாட்டில் நீதித்துறையில் பெரிய போதைப் பொருள் குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப் போகும் நீதிபதி டீமில் இருக்கும் நபர்களை கூலிப் படையினர் கொன்று வருகின்றனர். அந்த டீமுக்கு வெளிநாட்டு போலீஸார் கொடுக்க முடியாத பாதுகாப்பை இந்தியாவில் உள்ள செக்யூரிட்டி ஏஜென்சி கொடுக்கிறது என்கிற இடத்திலேயே கதை தோல்வியை தழுவி விட்டது.

இதையும் படிங்க: வெங்கட் பிரபுவை அசிங்கமா திட்டிய விஜய் ரசிகர்!.. கோட் படம் எடுக்குற இயக்குநருக்கு கிடைச்ச மரியாதை?..

கெளதம் மேனன் என்னத்த தான் கதை எழுதி இந்த படத்தை எடுத்திருக்கிறாரோ தெரியலை என்றும் கால் வைக்கிற இடத்துல எல்லாம் கண்ணி வெடியா இருந்தா எப்படிடா படத்தை பார்க்கிறது என விளாசித் தள்ளி உள்ளார்.

ஹீரோ வருணுக்கும் ஹீரோயின் ராஹிக்கும் பார்த்தவுடன் காதல் வருகிறது. அதன் பின்னர் தான் ஒரு கான்ட்ராக்ட் கில்லர் என்பதை ஹீரோ சொன்னவுடன் ஹீரோயின் பிரேக்கப் செய்து விட்டு வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். ஹீரோயினுக்கு பிடிக்கவில்லை என்பதால் உடனடியாக அந்த வேலையை விட்டு பாடிகார்டாக வருண் மாறிவிடுகிறார்.

இதையும் படிங்க: அம்பானி வீட்டுத்திருமண விழாவில் குடும்பத்துடன் ஆஜரான அட்லீ!.. ஜவான்.. ஜவான் என ஒரே கோஷம்!..

மீண்டும் ஹீரோயினை காப்பாற்றும் வேலை கிடைக்க அவரை எப்படி காப்பாற்றினார் என்று பார்த்தால் அங்கேயும் ஏகப்பட்ட சொதப்பல். சண்டைக் காட்சிகள் மட்டும் பார்க்கும் அளவுக்கு கெளதம் மேனன் உருவாக்கி இருக்கிறார். ஆனால், முழுசா படத்தை பார்க்க முடியவில்லை என விமர்சித்துள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top