Connect with us
suriya

Cinema News

சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ண சூர்யா!.. தட்டி தூக்கிய பிரசாந்த்!.. அட அந்த படமா!..

சினிமாவில் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு யாருக்கு எப்படி போகும் என சொல்லவே முடியாது. ஒரு சில படங்களின் கதை பல நடிகர்களிடமும் சென்று பின்னர் ஒரு நடிகரிடம் போகும். பல நடிகர்கள் வேண்டாம் என சொன்ன கதையில் ஒரு நடிகர் நடித்து ஹிட் கொடுப்பார். அதன்பின் ‘வட போச்சே’ என நடிக்க மறுத்த நடிகர்கள் ஃபீல் பண்ணுவார்கள்.

இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். கமலுக்கு சொன்ன கதையில் ரஜினி, ரஜினிக்கு சொன்ன கதையில் அர்ஜுன், அஜித்துக்கு சொன்ன கதையில் ஆர்யா, விஜய்க்கு சொன்ன கதையில் விக்ரம் என பல கதைகள் வெவ்வேறு நடிகர்களின் கைகளுக்கு மாறிப்போய்விடும். இதை தவிர்க்கவே முடியாது.

இதையும் படிங்க: கோட் படத்தை கைவிட்ட கலாநிதிமாறன்!.. சாட்டிலைட் உரிமை மட்டும் இவ்வளவு கோடியா?!.

இதற்கு கதை பிடிக்கவில்லை என்பதை மட்டுமே காரணமாக சொல்லிவிட முடியாது. ஒரு நடிகர் ஒரு படத்தில் நடித்து கொண்டிருப்பதால் இயக்குனரை காத்திருக்க சொல்வார். ஆனால், காத்திருக்க விருப்பமில்லாமல் அந்த கதையில் வேறு நடிகரை அந்த இயக்குனர் நடிக்க வைப்பார். முருகதாஸ் கஜினி பட கதையை முதலில் சொன்னது அஜித்திடம்தான். அஜித் காத்திருக்க சொன்னார். முருகதாஸ் அதை கேட்காமல் சூர்யாவை வைத்து அப்படத்தை இயக்கினார்.

நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா வசந்த் இயக்கத்தில் உருவான நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பே அவருக்கு பல படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. குறிப்பாக, சின்னக் கவுண்டர் படத்தின் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சிவக்குமாரின் வீட்டின் அருகே குடியிருந்தவர்.

chembaruthi

இவர் அடிக்கடி சிவக்குமார் வீட்டுக்கு போய் சூர்யாவிடம் ‘நீ என் படத்தில் நடி.. உன்னை நான் அறிமுகம் செய்து வைக்கிறேன்’ என பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால், சூர்யா ஆர்வம் காட்டவில்லை. ஆனால், வசந்த் கேட்டபோது ‘நாம் நடித்தால் என்ன’ என்கிற ஆசை ஏற்பட்டு நடிக்க வந்திருக்கிறார்.

அதேபோல், ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த், ரோஜா ஆகியோர் நடித்து 1992ம் வருடம் வெளியான செம்பருத்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பும் சூர்யாவுக்கு வந்திருக்கிறது. ஆனால், அப்போது சூர்யா கல்லூரியில் படித்து கொண்டிருந்ததால் ‘அவன் படிக்கட்டும்’ என சிவக்குமார் சொல்லிவிட்டாராம். அது நடந்து 5 வருடம் கழித்தே சூர்யா நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top