சூர்யாவுக்கு இதனால் தான் திமிரு அதிகமாகிடுச்சு!.. இயக்குனர்களின் சாபங்களை வாங்கிக் கட்டிக்கிறாரு!

Published on: July 3, 2024
---Advertisement---

ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க போதாக அறிவித்துவிட்டு அவருக்கு அல்வா கொடுத்த சூர்யா தொடர்ந்து வாடிவாசல் படத்தை தள்ளி போட்டுக்கொண்டே வெற்றிமாறனின் காக்க வைத்து வருகிறார். பாலாவுக்கு வாழ்வு கொடுக்கிறேன் என வணங்கான் படத்தை ஆரம்பித்த சூர்யா பாதியிலேயே அந்தப் படத்தை விட்டு வெளியேறி விட்டார்.

சூரரைப்போற்று எனும் சூப்பர் ஹிட் படத்தை சூர்யாவுக்கு கொடுத்த சுதா கொங்கராவுக்கு டாடா காட்டிவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கெல்லாம் காரணம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் தான் என சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.

இதையும் படிங்க: ஒருத்தருக்கும் ஒத்த பைசா கொடுக்காத வடிவேலு வெங்கல் ராவுக்கு கொடுக்க காரணம்!.. சீக்ரெட் சொன்ன நடிகர்..

நடிகர் சூர்யா முன்பை போல் இல்லை மும்பை சென்றதிலிருந்து சூர்யா ஆளே மாறிவிட்டார். எப்படியாவது இந்திய அளவில் பெரிய நடிகராக வேண்டும் என்பது மட்டுமே சூர்யாவின் தற்போதைய பெரிய இலக்கு என்கின்றனர்.

கங்குவா திரைப்படம் அதற்கு முதலில் சூர்யா பெரிய நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து அவர் நடிக்க உள்ள படங்களும் சுலபமாக உருவாக்கப்பட்டு பிளாக்பஸ்டர் படிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மட்டுமே சூர்யா தற்போது உழைத்து வருகிறார் என்றும் இனிமேல் ஹார்டு வொர்க் பண்ணினால் எடுபடாது என்றும் ஸ்மார்ட் ஒர்க்கை நம்பி சூர்யா நடந்ததுதான் இப்படி அடுத்தடுத்து இயக்குனர்களை அவாய்டு செய்ய காரணம் என்கின்றனர்.

இதையும் படிங்க: அவர் மட்டும் தான் விக் வச்சிட்டு வருவாரா?.. நான் வைக்கிறேன் பாரு பெரிய விக்!.. சத்யராஜ் அலப்பறை!..

கங்குவா திரைப்படம் சூர்யா எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்று 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளி விட்டால் அதன் பின்னர் சூர்யா கோலிவுட் இயக்குநர்கள் கைகளிலேயே சிக்கமாட்டார் என்கிற ஷாக்கிங் தகவல்களும் வெளியாகி உள்ளன.

தெலுங்கு மற்றும் இந்தி இயக்குனர்களுடன் சூர்யா தற்போது அடிக்கடி பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் தொடர்ந்து பேன் இந்தியா படங்களை செய்யும் முடிவுக்கு அவர் வந்து விட்டதால் தான் கோலிவுட் இயக்குனர்களை அடுத்தடுத்து கழட்டிவிட்டு வருகிறார் என்கின்றனர்.

இதையும் படிங்க: இதுதான் அந்த ஐகானிக்கா? வைரலாகும் ‘தளபதி 69’ படத்தின் கதை.. சும்மா கில்லி ஆடுவாப்ல தளபதி

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.