அஜித்தின் அடுத்த படம் மங்காத்தா2 வா? வெங்கட் பிரபுவே சொல்லிட்டாரே!..

Published on: August 27, 2024
---Advertisement---

Mankatha 2: அஜித் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் வெளியான மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தற்போது வெங்கட் பிரபு பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை 28 திரைப்படத்திலிருந்து இயக்குனராக கோலிவுட்டில் இருக்கிறார் வெங்கட் பிரபு: படத்தின் வசூல் குறைந்தாலும் திரைக்கதையில் எந்த இடத்திலுமே குறைவில்லாமல் இருப்பது வெங்கட் பிரபுவின் வழக்கம். இதனாலே அவருடைய எல்லா திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும்.

இதையும் படிங்க: தொலஞ்சி போன ஹார்ட் டிஸ்க் கிடைச்சிடுச்சி போல!.. ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்!..

இந்நிலையில் தற்போது விஜயை வைத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்தாலும் ட்ரைலரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார்.

Manktha

இதற்கு முன்னர் சிம்புவிற்கு மாநாடு என்ற வெற்றி படத்தையும், அஜித்துக்கு மங்காத்தா படத்தையும் கொடுத்தது வெங்கட் பிரபு தான். இந்நிலையில் வெங்கட் பிரபு மங்காத்தா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசி இருக்கிறார். அவர் குறிப்பிடும்போது, சமீபத்தில் அஜர்பைஜானில் அஜித் சாரை சந்தித்து மூன்று நாட்கள் பேசினேன். அப்போது மங்காத்தா இரண்டாம் பாகம் குறித்தும்  விவாதம் நடத்தினோம்.

இதையும் படிங்க: மொத்தமா கலைச்சி விட்டாச்சுல… புறநானாறு படத்தில் இத்தனை மாற்றமா?

கண்டிப்பாக மங்காத்தா இரண்டாம் பாகத்தில் அஜித் சார்தான் நடிப்பார். இல்லையென்றால் ரசிகர்களிடம் யார் திட்டு வாங்குவது. தளபதி விஜய் மற்றும் தல அஜித் என இருவருக்குமே நான் அவர்கள் இருவரையும் ஒன்றாக வைத்து படம் இயக்க ஆசைபடுவது குறித்து தெரியும். விரைவில் இது குறித்த நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இருந்தும், வெங்கட் பிரபு தற்போது கோட் திரைப்படத்தை முடித்துக் கொண்டு சிவகார்த்திகேயனுடன் இணையும் அடுத்த படத்தின் வேலைகளில் இணைகிறார். இதனால் இக்கூட்டணி இணைவதற்கு இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.