‘கோட்’க்கு ஓகே சொல்ல தளபதி எடுத்துக்கொண்ட நேரம்?

Published on: September 1, 2024
---Advertisement---

தன்னுடைய நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் கதைக்கு ஓகே சொல்ல விஜய் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் மற்றும் ஏராள நடிகர், நடிகைகளின் பங்களிப்பில் உருவாகி இருக்கும் படம் கோட். இன்னும் நான்கு தினங்களில் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதனால் படக்குழு தொடர்ந்து ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் படத்தின் கதைக்கு ஓகே சொல்ல விஜய் எடுத்துக்கொண்ட நேரம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி இந்த கதைக்கு ஒரே நாளில் விஜய் கிரீன் சிக்னல் அளித்து விட்டாராம். அதோடு முதலில் வெங்கட் பிரபு படத்தின் கதையை சுமார் 24 நிமிடங்கள் தான் ஆனதாம்.

விஜயின் கடைசி படத்துக்கு முந்தைய படம் என்பதால் இந்த படத்தினை இயக்க கடும்போட்டி நிலவியது. ஆனால் அவை அனைத்தையும் கடந்து வெங்கட் பிரபு இப்படத்தினை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தினை பொறுத்தவரை நல்ல விமர்சனங்கள் வரத்தொடங்கி இருக்கின்றன. எனவே கண்டிப்பாக இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

manju

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.