Connect with us

latest news

ஒருவழியாக வாய் திறந்த குரோஷி… குக் வித் கோமாளி செட்டில் என்ன நடந்தது?

Cook with comali: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பதை அந்த நேரத்தில் செட்டில் இருந்த காமெடி நடிகர் குரோஷி தன்னுடைய யூட்யூப் சேனல் மூலம் வெளியிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

குரோஷி கூறும்போது, மணிமேகலை இந்த அறிவிப்பை வெளியிடும்போது நானும் அவர் நண்பர்தான். என்னுடன் மூன்று வருடம் ஒரே ஷோவில் அவர் பணி புரிந்திருக்கிறார். அந்த நட்பால் தான் அவருக்கு கமெண்ட் போட்டேன். ஆனால் என்னுடைய பதிவின் கீழ் என்னை பிரியங்காவின் சொம்பு என மோசமாக விமர்சனம் செய்தனர்.

இதையும் படிங்க: கோலிவுட்டின் முதல் ஹீரோ அஜித்தான்! மதுபாலா சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

அந்த நெகட்டிவிட்டி வேண்டாம் என்பதால் அந்த கமெண்ட் டெலிட் செய்து விட்டேன். அதுபோல நானும் மணிமேகலையும் எங்களை பாலோ செய்து கொண்டதில்லை.  என்னுடைய நெருங்கிய தோழி அறந்தாங்கி நிஷாவை கூட நான் இன்ஸ்டாவில் பாலோ செய்யவில்லை.

குக் வித் கோமாளியில் திவ்யா துரைசாமி எலிமினேட்டான சுற்றில் திவ்யா எல்லாரை பற்றியும் பேசி வந்தார். அப்போ பிரியங்காவை பற்றியும் அவர் எனக்கு ஆதரவாக இருந்தார் என்பதையும் கூறினார். இதற்கு பிரியங்கா நானும் அவர் பற்றி சில விஷயங்களை கூறிக்கொள்ளலாமா எனக் கேட்க ரக்சன் எதுவும் சொல்லாமல் தலையை ஆட்டிவிட்டார். ஆனால் மணிமேகலை எதுவும் கூறவில்லை. பிரியங்கா பேச தொடங்கியவுடன் அவர் நீங்க பேச வேண்டாம் என தடுத்தார்.

ஏற்கனவே வெளியில் நீங்கள் தான் ஆங்கர் என்பது போல பேச்சு அடிபடுகிறது. அதனால் இது வேண்டாம் என மறுத்தார். இது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அடுத்த நாள் ஷூட்டிங் தொடங்கியது. அப்போது பிரியங்கா தரப்பில் அந்த சர்ச்சை பற்றி பேசிவிட்டு மணிமேகலையை தொடங்க வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினி படத்துல ஓபனிங் சாங்… கமல் பாடுவதற்கு வாய்ப்பு?

ஆனால் மணிமேகலை என்னால் அப்படி எதுவும் சொல்ல முடியாது. பிச்சை எடுத்தால் கூட பரவாயில்லை இதை செய்ய மாட்டேன் என மறுத்து கேரவன் சென்று விட்டார். இரண்டு மணி நேரம் சூட்டிங் நடக்கவில்லை. தயாரிப்பாளர் தரப்பு அவர் மணிமேகலையிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கேட்காமல் ஷோவை விட்டு வெளியேறினார்.

பிரியங்கா செய்வது மணிமேகலைக்கு பிடிக்கவில்லை என்றால் அதை தனியாக அழைத்துச் சொல்லியிருக்கலாம். அது பொதுவெளியில் சொல்லும் போது பிரச்சனையானது தான் பெரிய விஷயமாக பார்க்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் மணிமேகலைக்கே ஆதரவு பெருகி வருகிறது.

இரண்டு மணி நேரம் ஷோவை நிறுத்தியது மணிமேகலை மன்னிப்பு கேட்க சொல்வதற்கு தானா? அக்னாலேஜ்மென்ட் என்று ஏன் குரோஷி பூசி மொழுகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விஷயத்தில் விஜே பிரியங்கா தரப்பு எதுவும் விவரம் வெளியிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top