Connect with us
Bigg boss 8

Bigg Boss

Biggboss Tamil 8: இந்த வாரம் ‘வெளியேறியது’ இவர்தான்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 41 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. உள்ளே போன போட்டியாளர்கள் சொதப்பிட புதிய போட்டியாளர்களாக வைல்டு கார்டு என்ட்ரி உள்ளே சென்றனர். ஆனால் அவர்களும் ஆள விடுங்க சாமி என செம சைலண்டாக விளையாடி வருகின்றனர்.

கண்டெண்ட்

Also read: விஜயை பார்த்து கத்துக்கோங்கப்பா! பாடாய்படும் கங்குவா.. வீர வசனம் பேசினா இப்படித்தான்

எந்த டாஸ்க் கொடுத்தாலும் சாப்பிட்டு சாயங்காலம் பாத்துக்கலாம் மோடிலேயே அனைவரும் திகழ்கின்றனர். ஏதாவது சண்டை போட்டு கண்டெண்ட் தருவார்கள் என எதிர்பார்த்த பிக்பாஸின் நிலைமை தற்போது இலவு காத்த கிளியாக உள்ளது.

சஸ்பென்ஸ்

இதற்கிடையில் இந்த வாரம் மொத்தமாக புதிய போட்டியாளர்கள், பழைய போட்டியாளர்கள் என 13 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் வீட்டில் இருந்து வெளியேற போகும் அந்த ஒரு நபர் யாரென்று ஒரே சஸ்பென்சாக இருந்தது. மறுபுறம் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கலாம் என்றும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

வெளியேறிய போட்டியாளர்

இந்தநிலையில் சாச்சனா, ரியா, ராணவ், சிவகுமார், சத்யா, வர்ஷினி, தர்ஷிகா, சவுந்தர்யா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, ரஞ்சித், மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்களில் இருந்து, வீட்டைவிட்டு வெளியேறிய அந்த ஒரு போட்டியாளர் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.

ஆரூடம்

Also read: Nayanthara: தனுஷ், நயன்தாராவுக்கு இடையில் என்ன தான் பிரச்சனை? நடந்ததை யாராவது தெளிவா சொல்றாங்களா?

ரியா தான் அந்த போட்டியாளர். நாம் முன்பே ரியா, ரஞ்சித், ராணவ் ஆகியோரில் இருந்து ஒருவர் வெளியே செல்வார் என ஆரூடம் கூறியிருந்தோம். அது தற்போது உண்மையாகி விட்டது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் சாச்சனா அல்லது சிவகுமாரை வெளியே அனுப்பி இருக்கலாம் ரியாவை ஏன் பாஸ் அனுப்பினீர்கள்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எந்த பக்கம் போனாலும் கேட் போட்டா எப்புடி?

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top