Connect with us
Vijay serials

latest news

விஜயாவால் மீனா மீது விழுந்த பழி… சுயநலவாதியான பாக்கியா குடும்பம்… தங்கமயிலுக்கு பிரச்னை..

VijayTv: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களான பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை: விஜயாவின் பணம் காணாமல் போகி இருப்பதை பார்த்து பார்வதியுடன் பதறி இருக்கிறார். உடனே யோசிக்க மீனா வந்ததை தெரிந்து கொண்டு அவள்தான் எடுத்திருப்பாள் என சந்தேகப்படுகிறார். முத்து காசு கொடுத்ததை தெரிந்து கொண்டு இவளை வச்சு எடுத்து இருப்பாங்க என்கிறார்.

இதையும் படிங்க: கோட் கேமியோ ரோல்… அந்த டயலாக் எப்படி வந்ததுன்னு தெரியுமா? SK. சொன்ன சூப்பர் தகவல்

வீட்டிற்கு வரும் விஜயாவுக்கு பார்வதி கால் செய்து மீனா வந்தாளா காசை எடுத்துட்டாளா. உன் பையன் அனுப்பின பணமாச்சே என நாடகம் போடுகிறார். மீனா அழுக ஸ்ருதி அவருக்கு ஆறுதலாக பேசுகிறார். வெளியில் போக சொல்ல அண்ணாமலை நான் செத்தா தான் அவங்க போவாங்க என்கிறார். மீனா மற்றும் முத்து இருவரும் மாடியில் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி: கோபிக்கு ஜாமீன் கிடைத்துவிட அவரை வீட்டிற்கு அழைக்கிறார் செழியன். நான் வர முடியாது எனக் கூறும் கோபி நீயும் உங்க அம்மாவை நம்புற எனக் கூறி செல்கிறார். வீட்டில் இனியா ஈஸ்வரியை அழைத்து டிவியை காட்டுகிறார். அதில் ராதிகாவுடன் சேர்ந்து கோபி செய்ததை போல காட்டிவிடுகின்றார்.

அப்போ வரும் செழியன் அப்பாவுக்கு ஜாமீன் கிடைத்து விட்டதாக சொல்கிறார். பிரச்னை முடிந்துட்டதா கேட்க அம்மா கேஸை வாபஸ் வாங்குனா நடக்கும் என்கிறார். இனியா ப்ளீஸ்மா எனக் கேட்க அவர் என்னை அடிச்சப்ப உங்களுக்கெல்லாம் பிரச்னையா தெரியலை. ஒரே ஒருமுறை நான் அடிச்சேன். அவரை விட உங்களுக்கு வலிக்குதுல என்கிறார். மூவரும் பேச முடியாமல் திணறுகின்றனர்.

வீட்டில் ராதிகா டிவி பார்த்து இருக்க இந்த நியூஸை பார்த்து கண் கலங்குகிறார். ராதிகா அம்மா கோபப்பட்டு பாக்கியா வீட்டுக்கு செல்ல அப்போ கோபி வருகிறார். ராதிகா கோபத்தில் திட்டி எனக்குதான் பிரச்னை இருந்துச்சு. நான் அவரை பழி வாங்கவா போறேன் எனக் கோபப்படுகிறார். வீட்டு வாசலில் கோபி வந்து கத்துகிறார்.

இதையும் படிங்க: சத்யராஜ் என்ன இவ்வளோ கறாரா இருக்காரே… கூலி படத்தில் நடக்கும் சம்பவம்

அந்த நேரத்தில் அங்கு வரும் கோமதி நாளை பங்ஷனுக்கு நகையை எடுக்க செல்ல தங்கமயில் அதிர்ச்சி அடைகிறார். தனியாக போக வேண்டாம் எனக் கூற தங்கமயில் நான் வரேன் என்கிறார். ஆனால் குழலி நீ வீட்டு வேலையை பாரு. நான் அம்மாவுடன் சென்று வருவதாக கூறுகிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top