Connect with us
serial vijay

latest news

பயத்தில் அழுத ரோகிணி… ராதிகாவை வசைப்பாடிய கோபி… அப்பத்தாவின் சந்தோஷம்

VijayTV: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி,  சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களின் இன்றைய எபிசோடுகளுக்கான தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை: கிரிசை சுற்றி எதுவோ ரகசியம் இருப்பதாக முத்து சந்தேகப்படுகிறார். இதை ரோகிணி கேட்டு விடுகிறார். பின்னர் விஜயா மற்றும் மனோஜுக்கு உண்மை தெரிந்து அவரை வீட்டை விட்டு படுத்துவதாக கனவு கண்டு அழுகிறார். தூக்கத்தில் அவர் பதறி கத்த மனோஜ் அவரை சமாதானம் செய்கிறார்.

அடுத்த நாள் மீனா பூ கொடுக்க செல்ல அவரை ஒருவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் பதறி வித்யா வீட்டிற்கு செல்ல அங்கு வித்யா முத்துவின் போனை பார்த்துக் கொண்டிருக்கிறார். மீனா வந்து கதவை தட்ட திறக்கும்போது ரோகிணி, வித்யா பதறுகின்றனர். இருந்தும் மீனா பதட்டத்தில் அதை பார்க்காமல் சென்று விடுகிறார்.

இதையும் படிங்க: விடுதலை 2 விழாவில் மேடையிலேயே கோபப்பட்ட வெற்றிமாறன்!. இப்படி டென்ஷன் பண்ணிட்டீங்களே!..

ரோகிணி வித்யாவை இந்த போனை கடலில் தூக்கி போடு என திட்டி விடுகிறார்.  மீனாவை பாலோ செய்த நபர் முத்துவின் செட்டிற்கு வருகிறார். அவர் முத்துவின் நண்பரின் தம்பி என தெரிகிறது. காதல் செய்து கொண்டிருப்பதாக அவர் கூற அந்தப் பெண்ணிடம் எப்படி தன்னுடைய காதலை கூற வேண்டும் என முத்துவே ஐடியா கொடுக்கிறார்.

பாக்கியலட்சுமி: ஈஸ்வரி பாக்கியாவை கேசை வாபஸ் வாங்கக்கூற அவர் மறுத்துவிடுகிறார். இதைக் கேட்கும் செல்வி பையனுக்கு இவ்வளவு சப்போர்ட் செய்கிறார்கள். நீ கேஸை வாபஸ் வாங்காதே அக்கா என்கிறார். பாக்கியாவும் நான் செய்ய மாட்டேன் என கூறி விடுகிறார். கோபி இனியாவை அழைத்து வந்து பாக்கியாவிடம் விட்டு செல்கிறார்.

வீட்டிற்கு வரும் கோபியை ராதிகா கேள்வி கேட்க கடுப்பாகும் அவர் என் பொண்ணு சொன்னதுல தப்பே இல்ல. உன்னால தான் என் குடும்பத்தோட மொத்த நிம்மதியும் போச்சு என ராதிகாவை சாடுகிறார். இதனால் ராதிகா அவரை வீட்டை விட்டு வெளியில் போக சொல்ல இதோ இதை போல பேசுவதும் கடுப்பாக இருக்கிறது. இங்கே வாழ்வதற்கு வெளியில செத்து கிடக்கலாம் என சொல்லிவிட்டு செல்கிறார்.

பாக்கியா மற்றும் இனியா இருவரும் இரவு பேசிக் கொண்டிருக்கின்றனர். ராதிகாவிடம் எதற்கு சண்டை போட்டாய் என கேட்க அவங்க அம்மா உன்னை மரியாதை இல்லாமல் பேசியதாக கூறுகிறார். வீட்டில் என்னிடம் சண்டை போடற. வெளியில் என்னைப் பற்றி யாரும் சொன்னால் சண்டை போடுகிறார் என பாக்கியா சிரித்துக்கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: இளையராஜா மட்டும்தான் இருக்காரா!.. அப்ப வண்டியை ஓரமா விடுங்க?!.. நடிகர் சூரி பகிர்ந்த சுவாரஸ்யம்!..

அப்பொழுது அங்கு வரும் சக்திவேல் அப்பத்தாவை திட்டி செல்கிறார். வீட்டிற்கு வரும் முத்துவேல் அப்பத்தாவிடம் கண்டிப்பாக இனிமே அந்த வீட்டுடன் யாரும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சொல்லிவிட்டு செல்கிறார். குழலி தன்னுடைய மாமியார் குடும்பத்தில் தன்னை கொடுமைப்படுத்துவதாக அழுது புலம்புகிறார். இதை கேட்டு பாண்டியன் அதிர்ச்சி அடைகிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top