என்னைத் தவிர யாரையும் விடமாட்டேன்.. பா ரஞ்சித்துக்கு கட்டளையிட்ட சந்தோஷ் நாராயணன்

Published on: December 3, 2024
ranjith
---Advertisement---

கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இது ஒரு காமெடி கலந்த திரில்லர் படமாக வெளியானது. இந்தப் படத்திற்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது .

அதிலும் விஜய் சேதுபதி நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தை சிவி குமார் தயாரிக்க எஸ்.ஜே அர்ஜுன் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்கிறார்.  படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதையும் படிங்க: தொடர் வெற்றியை கொடுத்தும் பொழைக்க தெரியாத ஆளா இருக்காரே மணிகண்டன்..

இந்த விழாவிற்கு கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ஆதிக் ரவிச்சந்திரன், பா ரஞ்சித் ,இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இந்த விழாவில் பேசிய சந்தோஷ நாராயணன் அவருடைய ஆரம்பகால வாழ்க்கையை நினைவுப்படுத்தி அவருக்கும் பா ரஞ்சித்துக்கும் இடையிலான அந்த கருத்து வேறுபாட்டை பற்றியும் கூறியிருந்தார்.

ஆரம்பத்தில் டிஜேவாக இருந்த நான் அட்டகத்தி படத்தில் முதலில் வாசிக்கும் பொழுது என்னுடைய இசை ரஞ்சித்துக்கு பிடிக்கவில்லை. அதன் பிறகு கிராமிய இசை குறித்த பார்வையை என்னிடம் உருவாக்கியவர் அவர்தான். அதுபோல இனிமேல் பா ரஞ்சித் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன். வேறு யாரையும் விடமாட்டேன் இது என்னுடைய கட்டளை என ஆணித்தரமாக கூறினார்.

இதையும் படிங்க: சன் டிவி டிஆர்பி ஹிட் சீரியல்களின் புரோமோ அப்டேட்ஸ்… இத பாருங்க!..

ஏற்கனவே என்சாமி என்சாமி பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதோடு அந்தப் பாடலில் பாடிய தெருக்குரல் அறிவுக்கு எந்த ஒரு அங்கீகாரத்தையும் சந்தோஷநாராயணன் வழங்கவில்லை என்ற வகையில் அவர் மீது பா. ரஞ்சித் கடும் கோபத்தில் இருந்தார் .அதனால் சில காலம் அவருடன் பேசாமல் இருந்தார். இறுதியாக சார்பட்டா பரம்பரை படத்தில் தான் இருவரும் இணைந்து பணியாற்றினர். இதனால் கூட தங்கலான் படத்திற்கு பா ரஞ்சித் வேறொரு இசையமைப்பாளரை பயன்படுத்தினார். இந்த நிலையில் இன்று சந்தோஷ் நாராயணன் இப்படி கூறியது அனைவரும் மத்தியிலும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.