latest news
நடித்துக் கொண்டிருக்கும் போதே படத்திற்கு பிரேக் விட்ட ரஜினி.. கோபத்தில் பொங்கிய பிரபலம்
Published on
1997 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் தான் அருணாச்சலம். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்தார். கூடவே ரம்பா, மனோரமா, ஜெய்சங்கர் என பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்காக தமிழ் நாடு மாநில திரைப்பட விருதை பெற்றது. இந்தப் படத்தை பற்றி சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
சுந்தர் சி சமீபகாலமாக லைம் லைட்டில் இருக்கும் இயக்குனராக மாறியிருக்கிறார். மதகஜராஜா படம் கொடுத்த வெற்றி அவர் மீது ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் மட்டுமில்லாமல் அதற்கு முன் வெளியான அரண்மனை 4 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து வரும் சுந்தர் சி அடுத்ததாக நயன் தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தையும் எடுக்க இருக்கிறார்,
அந்தப் படத்திலும் சுந்தர் சி ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இயக்கும் சமீபகால படங்களில் சுந்தர் சி எப்படியாவது ஒரு கேரக்டரில் நடித்து விடுவார். அந்தப் படமும் வெற்றிப்படமாகவே அமைந்து விடுகிறது. இது ஒரு செண்டிமெண்ட்டாக கூட பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அருணாச்சலம் படத்தை முழுக்க முழுக்க காமெடியாக எடுக்க வேண்டும் என ரஜினியிடம் சொல்ல அப்போ கிரேஸி மோகனை வைத்து பண்ணலாம் என ரஜினி கூறியிருக்கிறார்.
கிரேஸி மோகன் என்று சொன்னதும் சுந்தர் சிக்கு டபுள் சந்தோஷம். அப்படி படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது ரஜினி திடீரென இந்தப் படத்தை இப்போதைக்கு நிறுத்திக் கொள்ளலாம். அப்புறம் பண்ணலாம் என சொல்லிவிட்டு சென்று விட்டாராம். உடனே கிரேஸி மோகன் சுந்தர் சியிடம் மிகுந்த கோபத்தில் ‘என்னய்யா இவரு? இப்படி இரண்டு மாதம் கழிச்சு ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டு போறாரு. இப்படி நிறுத்தினால் எப்படி?’ என கத்திவிட்டாராம்.
இதை பற்றி சுந்தர் சி கூறும் போது முதன் முறையாக கிரேஸி மோகன் கோபப்பட்டு அப்பொழுதுதான் பார்த்தேன்.அதுவும் ரஜினி மீது இந்தளவு கோபப்படுவாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது என சுந்தர் சி கூறினார்.
TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...