டில்லி ரிட்டர்ன்.. ஒரு வழியா சேர்ந்துட்டாங்கப்பா.. வைரலாகும் கார்த்தி – லோகி புகைப்படம்

Published on: March 18, 2025
---Advertisement---

லோகேஷ் கனகராஜுக்கு என்னதான் முதல் படம் மாநகரமாக இருந்தாலும் அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த படம் கைதி. இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த நரேன், அர்ஜுன் தாஸ் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்து ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவானது. இந்த படத்தை எஸ் ஆர் பாபு தயாரிக்க சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான இந்த படத்திற்கு யுஏ சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த படம் வருவதற்கு முன்பு வரை எந்த ஒரு பெரிய நடிகரின் படம் என்றாலும் அதில் ஒரு ஹீரோயின், டூயட் சாங், ரொமான்டிக் என எல்லாம் கலந்த ஒரு கலவையாக படங்கள் வெளியாகிக் கொண்டு வந்தன. அதை முற்றிலுமாக தன் படத்தின் மூலம் மாற்றி அமைத்தார் லோகேஷ் .இதில் முக்கியமாக ஹீரோவுக்கு ஹீரோயின் கிடையாது. பாடல் கிடையாது .முழுக்க முழுக்க ஒரு அதிரடி திரில்லர் திரைப்படமாக ஒரு நாள் நடக்கும் காட்சியை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

ஆரம்பத்தில் ஒரு புதுமுக இயக்குனர், கார்த்தி என ரசிகர்களின் வரவேற்பு பெரிதாக இந்த படத்திற்கு இல்லை. அதன் பிறகு சிறந்த கதை அம்சம் இந்த படத்தில் இருந்ததனால் நல்ல விமர்சனங்களை பெற அடுத்தடுத்த வாரங்களில் பல திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியை பெற்றது. தமிழகத்தில் 120 கோடிக்கு மேல் இந்த படம் வசூலை பெற்றது .இந்த படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆணித்தரமாக ஒரு இடத்தை பிடித்தார் என்று சொல்லலாம்.

இதனை அடுத்து விஜய் வைத்து மாஸ்டர் திரைப்படத்தை கொடுத்து ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராகவே மாறினார். தொடர்ந்து விக்ரம், லியோ என பெரிய பெரிய ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் மற்ற மொழி நடிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் லோகேஷ். இதனை அடுத்து கைதி 2 திரைப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க தற்போது லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் கூலி திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக கைதி 2 படத்தை தான் லோகேஷ் இயக்க இருக்கிறார் .இந்த நிலையில் நேற்று லோகேஷின் பிறந்தநாள் என்பதால் பல திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறினர். இந்த நிலையில் கார்த்தியும் லோகேஷை சந்தித்து அவருடைய வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார். கூடவே ஒரு தங்க காப்பையும் லோகேஷுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் .அந்த புகைப்படம் தான் இப்பொழுது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றது. கூடவே தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவும் உடன் இருக்கிறார். அதனால் அடுத்து கைதி 2 படத்திற்கான ஒரு ஆரம்ப புள்ளியாக இந்த ஒரு சந்திப்பு இருக்கலாம் என தெரிகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment