Connect with us

Cinema News

விடாமுயற்சி வாங்கிய அடி தெரியாதா? ‘ஜெயிலர் 2’-வுக்காக ரஜினி எடுக்கப்போகும் ரிஸ்க்..

கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்ததாக ஜெயிலர் 2 படத்திற்காக ரஜினி தயாராக இருக்கிறார். வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடித்துள்ள திரைப்படம் கூலி .லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. விஜய் ,கமல் ,கார்த்தி என அனைத்து நடிகர்களுக்கும் லோகேஷ் கனகராஜ் ஒரு மாஸான திரைப்படத்தை கொடுத்து அந்த படத்தையும் தன்னையும் மிகப் பெரிய அளவில் முன்னிலைப்படுத்தி இருக்கிறார். இன்று ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராகவே மாறி இருக்கிறார் லோகேஷ்.

அதனால் ரஜினியே விருப்பப்பட்டு அவருடன் இணைந்து ஒரு மாசான திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என நினைத்தார். அப்படி தயாரானது தான் கூலி. இந்தப் படம் மல்டி ஸ்டார்கள் இணைந்து கலக்கிய திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாகர்ஜுனா, உபேந்திரா, சத்தியராஜ் ,சுருதிஹாசன் ,மலையாள நடிகர் சௌபின் சாஹிர் என எல்லா மொழிகளிலும் இருக்கும் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்த திரைப்படம் கூலி. அனிருத் இசை என ஒரு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. ஆனால் அந்தப் படம் ஆரம்பிக்கப்படும் பொழுதே ஜெயிலர் வெற்றி பெறுமா பெறாதா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. ஏனெனில் பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனம் தான் அதற்கு காரணம் .பீஸ்ட் படத்தின் தோல்வி நெல்சனுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. இருந்தாலும் ரஜினி எப்படி நெல்சனுடன் இணைந்து படம் பண்ண போகிறார் என்ற ஒரு பேச்சும் அடிபட்டது.

ஆனால் இயக்குனருக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்ற காரணத்தினாலே ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ரஜினி. அவருடைய மாஸ் ஆக்சன் ஸ்டைல் எல்லாம் சேர்ந்து படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு சென்றது. வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்தது. அதற்கு அடுத்தபடியாக அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாக இருக்கிறது. இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதில் பாலையா, சிவராஜ்குமார் என ஒரு பேன் இந்தியா திரைப்படமாகவே ஜெய்லர் 2 திரைப்படம் உருவாகப் போகிறது.

இந்த நிலையில் செய்யாறு பாலு ஜெயிலர் 2 படத்தை பற்றி ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு தெரிந்த சினிமா வட்டாரங்கள் சில பேர் செய்யாறு பாலுவிடம் ஜெயிலர் 2 படத்தை பற்றிய ஒரு செய்தியை கூறினார்களாம். அதாவது இந்த படத்தை பொருத்தவரைக்கும் வழக்கமான ரஜினியின் படமாக இருக்கக் கூடாது. வித்தியாசமான ஒரு படமாக இருக்க வேண்டும். அதிலும் 80கள் காலத்தில் நடந்த ஒரு அழுத்தமான கதையை மையப்படுத்தி இந்த படம் அமைய வேண்டும் என ரஜினி ஆசைப்பட்டிருக்கிறாராம். அவர் நினைத்ததைப் போல தான் படம் உருவாகப் போகிறது என ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ரஜினி படம் என்றாலே மாஸ் ஆக்சன் கமர்சியல் என இருந்தால் தான் அது ரசிகர்களுக்கு பிடிக்கும். இதே மாதிரி தான் விடாமுயற்சி திரைப்படம் அஜித் கெரியரில் இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது. அழுத்தமான கதையை சொல்ல வேண்டும் என நினைத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஏமாற்றினார் அஜித். இப்போது ஜெயிலர் 2 படத்திற்காகவும் ரஜினி அதே மாதிரியான ஒரு ரிஸ்கை எடுக்கப் போகிறார் என செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top