அந்தப் படத்தின் செகண்ட் பார்ட்டில் நடிக்க ஆர்வம் காட்டும் நயன்.. இதெல்லாம் நடக்குமா?

Published on: March 18, 2025
---Advertisement---

முன்னணி நடிகை: தமிழ் சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படும் நயன்தாரா தற்போது வுமன் சென்ட்ரிக் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

சிங்கப்பெண்மணி:திருமணத்திற்கு பிறகு சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பில் தான் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார் நயன்தாரா. குழந்தைகளை அடிக்கடி வெளியில் அழைப்பு போவது, வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வது என அவர்களுக்கான தன் நேரத்தை செலவழித்து வருகிறார் நயன்தாரா. அது மட்டுமல்ல சினிமாவில் குடும்பம் குழந்தை நடிப்பு அதையும் தாண்டி தனியாக பிசினஸ் என ஒரு பிசியான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா.

சந்தானத்திற்கு அமோக வரவேற்பு: இந்த நிலையில் நயன்தாராவை பற்றி சந்தானம் ஒரு பேட்டியில் கூறிய தகவல் இப்போது வைரலாகி வருகின்றது. ஒரு சமயம் படம் சம்பந்தமாக விக்னேஷ் சிவனை பார்க்க சென்றிருந்தாராம் சந்தானம். அந்த சமயத்தில் நயன்தாரா தன் இரு குழந்தைகளிடமும் மாமா வந்திருக்காரு பாருங்க என சொல்லி அறிமுகப்படுத்தினாராம்.

தங்கச்சி நயன்தாரா: உடனே சந்தானம் நான்தான் உன்னுடைய மகன்களுக்கு தாய் மாமன் என கூறினாராம். இவர் வருகிறார் என்று தெரிந்ததும் பல வகையான உணவுகளை தயாரித்து வைத்திருந்தாராம். சினிமாவில் தங்கச்சி என்ற வகையில் பழகும் நடிகை நயன்தாரா தான் என சந்தானம் கூறினார். வல்லவன் திரைப்படத்திலிருந்து அவர் எனக்கு பழக்கம் என்றும் தொடர்ந்து அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன் என்றும் சந்தானம் கூறினார்.

பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அல்லது அந்த மாதிரி ஒரு படத்தின் கதையில் நான் சந்தானம் ஆகியோர் காம்போவில் நடிக்க அழைத்தார்கள் என்றால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என நயன்தாரா இயக்குனர் ராஜேஷிடம் கூறி இருக்கிறாராம்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment