Connect with us

latest news

முத்துவுக்கு கிடைத்த ஆதாரம்… இனியாவிற்காக ராதிகா செய்த விஷயம்… அடுத்த விஜய் டிவி அப்டேட்ஸ்

Vijay Tv: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட்களுக்கான புரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது. இருந்தும் ரோகிணிக்கு பெரிய ஆப்பாக வைப்பார்கள் என பார்த்தால் கடைசியில் அப்பாவை கிளோஸ் செய்து அசால்ட்டாக தப்பிவிட்டார். கடைசி வார இறுதியில் முத்துவின் தொலைந்த போன் கிடைக்கிறது.

தாத்தா கொடுத்த போனை ஆன் செய்து பார்த்த போது தொலைந்த முத்துவின் போன் என கண்டுபிடித்து விடுகின்றனர். உடனே முத்து அண்ணாமலையிடம் சொல்ல அதை கண்டுபிடித்ததை ரோகிணி தெரிந்து கொள்கிறார். பார்லர் அம்மா மீது சந்தேகம் வந்து வித்யா போட்டோவை அனுப்ப தாத்தா அவங்கதான் என்பதை சொல்லிவிடுகிறார்.

வித்யா வீட்டுக்கு வரும் முத்து என்னோட போனை நீதான் திருடினீயா எனக் கேட்கிறார். ஏற்கனவே ரோகிணி மீது கோபத்தில் இருக்கும் வித்யா உண்மையை சொல்வாரா இல்லை சமாளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். (கண்டிப்பா சமாளிச்சிருவாங்க. ரோகிணியோட மறுபடி சேர்ந்துடுவாங்க அதானா டைரக்டர் ஐயா)

பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா கொடுத்த கெடுநாள் முடிய இருப்பதை சொல்லி ராதிகா கிளம்பலாம் என்கிறார். எல்லாரும் அதிர்ச்சியாக இருக்க கோபி தான் சென்று டிரெஸை எடுத்து வருவதாக கூறுகிறார். இல்லை நீங்க இங்கதான் இருக்க போறீங்க. நான், மயூதான் போறோம் என்கிறார்.

இனியாவிடம் உன் டாடியை உன் கிட்டையே கொடுத்துட்டு போறதா சொல்கிறார். அவரும் ராதிகாவை கட்டியணைத்து கொள்ள அவரும் கிளம்பிவிடுகிறார். (இதலாம் கதைனு நினைச்சு ஓட்டுறீங்களா ரசிகர்களை பாத்தா பாவமா இல்லையா)

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top