வதந்திக்கு முற்றுப்புள்ளி.. வந்தா நாங்க சேர்ந்துதான் வருவோம்.. சிம்புவின் சூப்பர் அப்டேட்!..

Published on: March 18, 2025
---Advertisement---

நடிகர் சிம்பு: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த சிம்பு தொடர்ந்து சில சர்ச்சைகளில் சிக்கிய தனது பெயரை கெடுத்துக் கொண்டார். காதல் சர்ச்சைகள், ரெட் கார்ட் பிரச்சனை என சிக்கி தவித்து வந்த சிம்பு பின்னர் உடல் எடை கூடியதால் படத்தில் நடிக்க முடியாமல் அவதிப்பட்டார்.

செகண்ட் இன்னிங்ஸ்: பிறகு சிறிது கேப் எடுத்துக் கொண்ட சிம்பு கடகடவென தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கின்றார். மாநாடு திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார் நடிகர் சிம்பு. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

எஸ்டிஆர் 48: பத்து தல திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு கமிட்டான திரைப்படம் எஸ்டிஆர் 48. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக இருந்த இந்த திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியானது. படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியானது தவிர படம் டேக் ஆஃப் ஆகவில்லை. பிறகு சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் காரணமாக இப்படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்கியது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்.

இதனால் இப்படத்தை வேறு ஒரு நிறுவனத்தை வைத்து எடுக்கலாம் என்ற முயற்சியில் இறங்கி வந்தார் சிம்பு. ஆனால் படத்தின் பட்ஜெட் சற்று அதிகமாக இருப்பதால் எந்த நிறுவனமும் இப்படத்தை தயாரிப்பதற்கு முன்வரவில்லை. இதனால் படம் டிராப் ஆகிவிட்டது என்று பலரும் கூறி வந்தார்கள். இதற்கிடையில் நடிகர் சிம்பு அடுத்ததாக அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இதனால் எஸ்டிஆர் 48 கைவிடப்பட்டது என்று கூறி வந்தார்கள். இது ஒரு புறம் இருக்க கடந்த சில தினங்களாக தேசிங்கு பெரியசாமி அந்த கதையை நடிகர் அஜித் குமாரிடம் கூறியிருப்பதாகவும் அவரை வைத்து படத்தை இயக்க இருப்பதாக கூறிவந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கின்றது.

அதாவது நடிகர் சிம்பு தேசிங்கு பெரியசாமி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை வைத்து பார்க்கும் போது தேசிங்கு பெரியசாமி அந்த கதையை சிம்புவை வைத்தான் எடுப்பார் என்பது உறுதியாகி இருக்கின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment