Connect with us

latest news

மாப்பிள்ளை இவருதான் காமெடி… செந்திலின் நிஜ வாழ்க்கையிலுமா? சகதியில் வசமா சிக்கிக்கிட்டாரே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பிரபல காமெடி நடிகர் செந்தில் நடித்த படையப்பா படத்தில் பிரமாதமா ஒரு காமெடி இருக்கும். மாப்பிள்ளை இவருதான். ஆனா இவரு போட்டுருக்கற சட்டை என்னதுன்னு ரஜினி சொல்வார். எப்படின்னா பொண்ணு பார்க்கப் போகும்போது சகதியில் சிக்கி விழுந்து விடும் அவருக்கு டிரஸ் எல்லாம் சகதியாகிப் போய்விடும்.

அப்போது ரஜினியிடம் டிரஸ் கேட்பார். ரஜினியின் டிரஸ்சை செந்தில் போட்டுக் கொள்வார். அப்போது கூட்டத்தைப் பார்த்ததும் போவோர் வருவோர் எல்லாம் ‘என்ன பொண்ணு பார்க்கப் போறீங்களா? மாப்பிள்ளை யாரு?’ன்னு கேட்பாங்க. ‘மாப்பிள்ளை இவருதான். ஆனா இவரு போட்டுருக்குற டிரஸ் என்னது’ன்னு ரஜினி சொல்வார்.

‘அதனால தான் டிப் டாப்பா இருக்காரு…’ன்னு எல்லாரும் சொல்வாங்க. அது செந்திலுக்கு எரிச்சலைத் தந்து விடும். உடனே ‘படையப்பா இனி மாப்பிள்ளை நான்தான். ஆனா நான் போட்டுருக்குற டிரஸ் உன்னது இல்லன்னு சொல்லணும்’னு செந்தில் சொல்வார். அப்போ ஒருவர் கூட்டத்தைப் பார்த்து விடுவார்.

‘அண்ணே மாப்பிள்ளை இவருதான்.ஆனா இவரு போட்டுருக்குற டிரஸ் என்னது இல்ல’ன்னு ரஜினி சொல்வார். ‘அவன் கேட்டானா…’ன்னு எரிந்து விழுவார் செந்தில். ரஜினி அமைதியாக இருப்பார். கடைசியில் ‘மாப்பிள்ளை நான் தான். ஆனா நான் போட்டுருக்குற டிரஸ் பத்தி மறந்துரு’ன்னு சொல்வாரு. அப்போ ஒரு பெண் ‘இதுல மாப்பிள்ளை யாரு..?”ன்னு கேட்பாங்க. ‘மாப்பிள்ளை இவருதாம்மா. ஆனா இவரு போட்டுருக்குற டிரஸ் பத்தி மறந்துட்டேன்’னு ரஜினி சொல்வார்.

டென்ஷனின் உச்சிக்கே சென்ற செந்தில் ‘படையப்பா…’ன்னு போட்டுருக்குற அவரோட டிரஸ்சை கழற்றிக் கொடுத்துவிட்டு ‘எனக்கு டிரஸ்சும் வேணாம். கல்யாணமும் வேணாம். வாழ்க்கை பூரா பிரமச்சாரியாகவே இருந்துடறேன்’னு வெறும் அண்ட்ராயருடன் ஓடிவிடுவார். இது படத்தில் ரொம்பவே காமெடியாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அது போல செந்திலின் நிஜ வாழ்க்கையிலும் கிராமத்திற்குச் சென்று பெண் பார்க்கப் போகும்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது மழைக்காலம். ரோட்டில் தண்ணீரை ஒரு பக்க வயலில் இருந்து மறுபக்கத்திற்கு கால்வாய் போல தோண்டி விட்டுள்ளனர்.

அப்போது செந்தில் வந்த கார் அந்த சகதியில் சிக்கிக் கொண்டது. அக்கம்பக்கத்தில் உள்ள இளைஞர்கள் ஏ காரு சிக்கிக்கிடுச்சுடான்னு வந்து பாண்டியராஜன் படத்தில் தள்ளிவிடுவது போல தள்ளிவிட்டார்களாம். இந்த தகவலை செந்திலின் மனைவி கலைச்செல்வியே யூடியூப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top