Connect with us

Cinema News

சொந்தக்காரங்க கூட இவ்ளோ அக்கறை காட்ட மாட்டாங்க… ஆனா ரஜினி… நெகிழ்ந்த ஆர்த்தி கணேஷ்கர்

நடிகை ஆர்த்தி கணேஷ்கர் தமிழ்த்திரை உலகில் குழந்தை நட்சத்திரமா நடித்துள்ளார். 65 படங்கள் வரை குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ள இவர் என் தங்கை கல்யாணி படத்தில் கணேஷ்கரின் சகோதரியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற்காலத்தில் பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். இவர் கணேஷ்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சன்டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். கலைஞர் டிவியில் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கணவருடன் இணைந்து நடனமாடினார். 2வது பரிசையும் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டாக இருந்தாலும் கலகலன்னு பேசி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பதில் ஆர்த்தி கில்லாடி.

இவர் தன் கணவரின் பிறந்தநாள் குறித்தும், ரஜினியிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கியது குறித்தும் நெகிழ்ச்சியுடன் சில தகவல்களைச் சொல்கிறார். என்னன்னு பாருங்க. ஒவ்வொரு வருஷமும் பிறந்தநாளுக்கு நாங்க ரெண்டு பேருமே ரஜினி சார் சென்னையில் இருந்தா நேரில் போய் வாழ்த்து வாங்கிடுவோம். வெளியூர்ல இருந்தா போன்ல வாங்குவோம்.

இந்த வருஷம் சென்னையில் இருந்தார். அதனால மே 10ம் தேதி கணேஷ் பிறந்தநாள் அன்று வரலாம்மான்னு கேட்டு அவரை போய் சந்தித்தோம். நாங்க நடிச்சிக்கிட்டு இருக்குற படங்கள் பற்றி கேட்டார். நிறைய அட்வைஸ் தந்தார். குறிப்பா சினிமா தாண்டி வருமானத்துக்கு ஏதாவது வழி பண்ணி வைக்கணும்னு ரொம்ப அக்கறையோடு சொன்னார்.

சொந்தக்காரங்க கூட இப்படி அக்கறை எல்லாம் படுவாங்களான்னு தெரியாது. ஆனா ரஜினி சார் அப்படி அக்கறைப்பட்டார் என்கிறார் ஆர்த்தி கணேஷ்கர்.

ஆர்த்தி கணேஷ்கர் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார். இவரது நடிப்பில் அரண்மனை, நான் சிகப்பு மனிதன், வணக்கம் சென்னை, தடையறத் தாக்க, எதிர்நீச்சல், கழுகு, தாமிரபரணி, குட்டி, படிககாதவன், திருப்பதி, வில்லு படங்கள் முக்கியமானவை.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top