Connect with us

latest news

ரஜினியின் பெர்ஷனல் எல்லாமே தெரிந்த நடிகர்.. கடைசியில் அவருக்கே வில்லனாக மாறிட்டாரே

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் ஒரு மூத்த நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த 50 ஆண்டுகளில் அவர் செய்யாத சாதனைகள் கிடையாது. அடையாத வெற்றிகள் கிடையாது. வில்லனாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த ரஜினி அதன் பிறகு தன்னுடைய அபார நடிப்பாலும் உழைப்பாலும் படிப்படியாக வளர்ந்து ஹீரோவாக முன்னேறினார்.

ஆரம்பத்தில் ரஜினி எல்லா கெட்ட பழக்கத்திற்கும் அடிமையாக இருந்தார். அதனால் மன உளைச்சல்,அழுத்தம், உடல்நிலை மோசமாவது என இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் பிழைப்பாரா மாட்டாரா என்ற ஒரு சூழ்நிலையிலும் ரஜினி இருந்தார். அதன் பிறகு பாலச்சந்தர், ஸ்ரீ பிரியா இவர்களின் உதவியால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஆன்மீகத்தில் இறங்கி இன்று ஒரு முழு மனிதராக மாறி இருக்கிறார்.

அவருடைய வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் நடந்திருக்கிறது. யாருக்கும் தெரியாத சில விஷயங்களும் நடந்து இருக்கிறது. இதைப் பற்றி நடிகர் ஜெய்சங்கரிடம் நிறைய பேசுவாராம் ரஜினி. ஒய் ஜி மகேந்திரன் இதைப்பற்றி கூறும் பொழுது ரஜினிக்கும் ஜெய்சங்கருக்கும் இடையே இருந்த பாண்டிங் மிகவும் ஆச்சரியமானது. ரஜினி எல்லா விஷயங்களையும் ஜெய்சங்கரிடம் விவாதிப்பார்.

அவருடைய பர்சனல் எல்லாவற்றை பற்றியும் ஜெய்சங்கரிடம்தான் தெரிவிப்பார். இருவரும் கிள்ளி கிள்ளி விளையாடுவார்கள். அது போல முரட்டுக்காளை படத்தில் தான் ஜெய்சங்கர் வில்லனாக புது அவதாரம் எடுத்தார். அந்த படத்திற்கு பிறகு தான் அவர் நடித்த அனைத்து படங்களும் முழு சம்பளம் கிடைத்ததாகவும் ஜெய்சங்கர் கூறினாராம்.அதற்கு முன்பு வரை அவர் ஹீரோவாக நடித்த படங்களில் சில நேரங்களில் அவருக்கு சம்பளம் பாக்கி இருக்கும்.

jai

jai

அதைப்பற்றி அவர் என்றைக்குமே கவலைப்பட்டதே கிடையாது. சில நேரங்களில் சம்பளமே வேண்டாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். ஆனால் எப்பொழுது வில்லனாக நடிக்க ஆரம்பித்தாரோ அதன் பிறகு அவருடைய மார்க்கெட்டும் உயர்ந்தது. அதற்கான சம்பளமும் முழுவதுமாக எனக்கு கிடைக்க ஆரம்பித்தது என ஜெய்சங்கர் ஒய் ஜி மகேந்திரனிடம் கூறினாராம்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top