ஜெயிலர் 2-வில் நடிக்க பாலையா கேட்ட சம்பளம்!.. 20 நாளுக்கு இவ்வளவு கோடியா!…

Published on: August 8, 2025
---Advertisement---

Jailer2: ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் பிறகு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை, தேனி போன்ற மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள போகும் ரஜினியை பார்க்க அங்குள்ள ஊர் மக்கள் திரண்டு வந்து ஒவ்வொரு நாளும் ரஜினியை பார்த்துவிட்டு சென்றனர்.

அது சம்பந்தமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்ததை ஒட்டி அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இறங்கியது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

அவரும் இப்போது இரண்டாம் பாகத்தில் தொடர்கிறார். அதைப்போல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோரும் ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் நடித்து பெரிய மாஸ் காட்டினார்கள். இப்போது அவர்களும் இந்த இரண்டாம் பாகத்தில் தொடர்கிறார்கள் .இதில் கூடுதலாக தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

அவர் தற்போது சென்னைக்கு வந்து கலாநிதி மாறனை சந்தித்து விட்டு சென்றிருக்கிறாராம். பாலகிருஷ்ணாவிடம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 20 நாட்கள் கால்சீட் கேட்டு இருக்கிறது. அதற்கு பாலகிருஷ்ணா 50 கோடி சம்பளம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பதால் அவர் கேட்ட தொகையை கொடுக்க சன் பிக்சர்ஸ் நிறுவனமும் முடிவு செய்து இருக்கிறது.

rajini

அதனால் கூடிய சீக்கிரம் பாலகிருஷ்ணா இந்த படத்தில் இணைவார் என தகவல் வெளியாகி இருக்கிறது. மற்ற மொழி சினிமாக்களை விட தமிழ் சினிமாவில் தான் நடிகர்களுக்கான சம்பளம் என்பது மிக அதிகமாக கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலகிருஷ்ணாவும் இப்போது 50 கோடி கேட்டிருக்கும் நிலையில் அதையும் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனம். அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களும் இந்த படத்தில் நடிக்க இருப்பதால் ஜெயிலர் 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கிறது. அது மட்டுமல்ல ஒரு பான் இந்தியா படமாகவும் உருவாகி வருகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment