கூலி படத்துக்கு டைட்டில் வந்தது எப்படி? சரத்குமாருக்கு சம்பந்தம் இருக்கா?

Published on: August 8, 2025
---Advertisement---

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி. இந்தப் படத்தில் அமீர்கான் ஒரு காட்சியில் நடித்துள்ளாராம். நாகர்ஜூனா, உபேந்திரா, சுருதிஹாசன், சத்யராஜ் உள்பட பலரும் நடித்துள்ளனர். இதனால் கூலி படத்துக்குப் பல்வேறு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அனிருத் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் சிக்கிடு சிக்கிடு பாடல் வெளியானது.

அந்த வகையில் இந்தப் பாடலில் டிஆரும் வாய்ஸ் கொடுத்துள்ளார். ரொம்பவே வைப்பாக வந்துள்ளது. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஆகஸ்டு 14ல் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு டைட்டில் எப்படி வந்தது? சரத்குமார் நடித்த கூலி படம் ஏற்கனவே உள்ளது. அதனால் அவருக்கும் இதுல ஏதாவது சம்பந்தம் உள்ளதா? வாங்க என்ன விவரம்னு பார்க்கலாம்.

கூலி படத்தின் டைட்டில் ரைட்ஸ் யார் வச்சிருக்காங்க. சரத்குமாருக்கு தேங்க்ஸ் கார்டு போடுவாங்களான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

சரத்குமார் கதாநாயகனாக நடித்த கூலி படத்தின் தயாரிப்பாளர் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன். அந்தப் படத்தை இயக்கியவர் பி.வாசு. அதனால அவர் கூலி படத்துக்குப் பேரு வச்சதுக்கு வாய்ப்பு இருக்கு. கூலி என்ற பெயருக்கு அனுமதி பெறணும்னா சன்பிக்சர்ஸ் அனுமதி பெற வேண்டியது பி.வாசு அல்லது மாணிக்கம் நாராயணன்கிட்ட தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாணிக்கம் நாராயணனைப் பொருத்தவரை கலாநிதி மாறன் மேல மிகுந்த மரியாதை என்பதால் அவர் கேட்ட உடனே டைட்டிலை மறுபேச்சு இல்லாம கொடுத்துருப்பாருன்னுதான் நான் நினைக்கிறேன். அந்தப் படத்தில் சரத்குமாருக்கு எந்த பங்கும் இருக்க வாய்ப்பு இல்லை. அதனால அவருக்கு கூலி படத்து நன்றி கார்டு போடுவதற்கு சிறிதும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment